India
இந்தியாவில் 3வது அலை பரவத் தொடங்கிவிட்டதா..? - 10 நாட்களில் 500 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று!
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கடந்த ஏப்ரல் மாதத்தில், நாட்டில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. பிறகு, படிப்படியாக குறைந்து வந்த கொரோனா தொற்று மீண்டும் சில நாட்களாக அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 40,120 பேர் கொரோனா தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 585 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், கொரோனா வைரஸ் மூன்றாவது அலை அதிகமாகக் குழந்தைகளைத் தாக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்நிலையில், பெங்களூருவில் கடந்த 10 நாட்களில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, மூன்றாவது அலை தொடங்கிவிட்டதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பெங்களூருவில் கடந்த 1ஆம் தேதியிலிருந்து 10ஆம் தேதிக்குள் 543 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கர்நாடகா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் 88 குழந்தைகள் 9 வயதிற்கும் குறைவானவர்கள் என்றும் 411 குழந்தைகள் 10 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில ஆண்டுகளில் குழந்தைகளையே கொரோனா தொற்று அதிகம் தாக்கும் என்று அமெரிக்க நார்வே குழு நடத்திய ஆய்வில் கூறியுள்ள நிலையில், பெங்களூரில் 500 குழந்தைகளுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!