India
‘பேஸ்புக் லைவ்’வில் முடிந்த மூன்றாண்டு காதல்.. காதலன் எடுத்த விபரீத முடிவு: மும்பையில் நடந்த சோகம்!
மும்பையைச் சேர்ந்தவர் அங்குஷ் பவார். இவர் மருத்துவமனை ஒன்றில் வார்டு பாயாக வேலை செய்து வந்தார். அங்குஷ் பவார் மூன்று ஆண்டுகளாகப் பெண் ஒருவரைக் காதலித்து வந்தார்.
பின்னர், காதலியிடம் அங்குஷ் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார். இதற்கு அவர், சில காலம் செல்லட்டும் என கூறி வந்துள்ளார். இதனால் காதலர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இப்படி, சம்பவத்தன்று மீண்டும் காதலர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது அங்குஷ் பவாரைப் பார்த்து 'இறந்து போ' என காதலி தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் பேஸ்புக் லைவில்,"தனது காதலி திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டதாகவும், அவரை மூன்று ஆண்டுகள் காதலித்து வந்ததாகவும்" கூறியுள்ளார்.
பின்னர், தன் அறையில் அங்குஷ் பவார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறிந்த போலிஸார் வழக்குப் பதிவு செய்து காதலியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Also Read
-
துளை வழியாக சேப்பாக்கம் மைதானத்தை பார்க்கும்போது இதைத்தான் நினைத்தேன் - நடராஜன் நெகிழ்ச்சி !
-
எல்லாம் தெரிந்தும் பிரஜ்வல் ரேவண்ணாவை ஆதரித்த மோடி : வெளிவந்த அதிர்ச்சி உண்மை!
-
உலகின் 3-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் : ப.சிதம்பரம் குறிப்பிடுவது என்ன?
-
பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ விவகாரம் : பிரதமர் மோடி வாய் திறப்பாரா? - பிரியங்கா காந்தி கேள்வி!
-
"இனி என்னிடம் ஆலோசனை கேட்காதே" - ருத்துராஜிடம் கூறிய தோனி... பத்தினாத் வெளியிட்ட தகவல் !