India
'நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள்... பா.ஜ.க ஆளும் உ.பியில் மட்டும் 8' : பகீர் தகவலை வெளியிட்ட UGC!
இந்தியாவில், 24 போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாக யு.ஜி.சி தெரிவித்துள்ளது என்றும், இதில் அதிகமான பல்கலைக்கழகங்கள் உத்தர பிரதேசத்தில் இருப்பதாகவும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்குத்தான் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த பதிலை அளித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "நாடுமுழுவதும் 24 போலிப் பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதை யு.ஜி.சி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு கண்டறிந்துள்ளது.
இந்தப் போலி பல்கலைக்கழகங்களில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் மட்டுமே 8 பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. டெல்லியில் 7, ஒடிசா, மேற்குவங்கத்தில் 2 பல்கலைக்கழகமும், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, ஆந்திராவில் தலா ஒரு போலி பல்கலைக்கழகம் செயல்படுகிறது.
இந்த பல்கலைக்கழகங்கள் குறித்து நாளேடுகளில், யுஜிசி சார்பில் எச்சரிக்கை விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் போலிப் பல்கலைக்கழகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதில் படிக்கும் மாணவர்களுக்குப் பட்டம் அளிக்கும் அதிகாரம் இல்லை. இந்த பல்கலைக்கழகத்தின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!