India
“ஜூலை 16ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்” : புதுவை முதலமைச்சர் அறிவிப்பு!
புதுச்சேரியில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவியதை அடுத்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு, மாணவர்களுக்கு இணைய வழியில் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. மேலும் அரசும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்துள்ளது. கொரோனா குறைவதை அடுத்து பள்ளி, கல்லூரிகள் வரும் 16ம் தேதி திறக்கலாம் என அரசு முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ரங்கசாமி, "புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதையடுத்து இம்மாதம் 16ம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். அதேபோல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலையை உயர்த்த தவெக அரசு முடிவு: அனிதா ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு!
-
“2028 ஒலிம்பிக் கிரிக்கெட்.. 6 அணிகள்.. தகுதிச்சுற்று நடைமுறையை வெளியிட்ட ஐசிசி” - முழு விவரம்!
-
4 முறை சாம்பியனை வீட்டிற்கு அனுப்பிய குட்டி நாடு - ஜெர்மனியை வீழ்த்தி பராகுவே கொடுத்த மாஸ் வெற்றி!
-
“தூக்கில் தொங்கிய படி.. காதல் ஜோடி சடலங்கள் மீட்பு.. ஆணவக் கொ*லையா?” - மயிலாடுதுறையில் பரபரப்பு சம்பவம்!
-
“ஏ.டி.எம் கார்டு மூலம் மாத்திரைப் பொடி.. கில்லி சரத்-ஐ என்ன செய்யப்போகிறார் யோக்கியர் விஜய்” - முரசொலி!