India
“ஜூலை 16ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்” : புதுவை முதலமைச்சர் அறிவிப்பு!
புதுச்சேரியில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவியதை அடுத்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு, மாணவர்களுக்கு இணைய வழியில் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. மேலும் அரசும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்துள்ளது. கொரோனா குறைவதை அடுத்து பள்ளி, கல்லூரிகள் வரும் 16ம் தேதி திறக்கலாம் என அரசு முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ரங்கசாமி, "புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதையடுத்து இம்மாதம் 16ம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். அதேபோல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!