India
“பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போடுவதால் குழந்தைக்கும் நன்மை” - ICMR நிபுணர் விளக்கம்!
பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போடுவதால் தாய்க்கு உருவாகும் எதிர்ப்பொருள் குழந்தைக்கும் பயனுள்ளதாக இருக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தொற்றுநோயியல் பிரிவு தலைவர் டாக்டர் சமிரன் பாண்டா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “பாலூட்டும் தாய்மார்கள், கொரோனாவுக்கு எதிராக எந்த தயக்கமும் இல்லாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போடுவதன் காரணமாக தாய்க்கு உருவாகும் எதிர்ப்பொருள், தாய் பாலூட்டும்போது குழந்தைக்கும் சென்று பயனுள்ளதாக இருக்கும்.
நோய் எதிர்ப்புச் சக்தி, எதிர்ப்பொருள்களை மட்டும் சார்ந்தது அல்ல என்பதால், எதிர்ப்பொருள் பரிசோதனைக்கு செல்வது வீண். உடலில் உருவாகும் எதிர்ப்பொருட்கள், கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் எதிர்ப்பொருட்களாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.
ஒருவர் தடுப்பூசி போடும்போது இரு வகையான நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகிறது. ஒன்று எதிர்ப்பொருளை சமநிலைப்படுத்தும். இரண்டாவது செல் மத்தியஸ்த நோய் எதிர்ப்பு சக்தியாகும். மூன்றாவது மற்றும் மிக முக்கியமான ஒன்று நோய் எதிர்ப்பு சக்தி. இந்த நோய் எதிர்ப்பு சக்தி, தடுப்பூசி போட்ட பின்பு ஏற்படுகிறது இது உடல் செல்லில் இருக்கிறது. வைரஸ் உடலில் நுழையும்போது, இது எதிர்த்துச் செயல்படுகிறது.
ஆஸ்துமா, தூசி அலர்ஜி, மகரந்த துகள் அலர்ஜி உள்ளவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இணை நோய் உள்ளவர்களும், உடல்நிலை சீராக இருந்தால், தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். நீரிழிவு நோய் உள்ளவர்களும், இதர பிரச்னைகள் உள்ளவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது. ஏனென்றால் அவர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான அபாயம் அதிகம்.
புதிய வகை கொரோனா பரவும் நிலையில் ஏற்கெனவே கூறப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சையில் எந்த மாற்றமும் இல்லை. ஏற்கெனவே உள்ள கொரோனா வகையாக இருந்தாலும், புதிய வகை கொரோனாவாக இருந்தாலும், அனைத்து வகைகளும், பரவும் விதம் ஒரே மாதிரியானதுதான். முகக்கவசம் அணிவது, கூட்டம் உள்ள இடங்களை தவிர்ப்பது, கிருமிநாசினி ஆகியவை இன்னும் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் திறமையான நடைமுறைகளாக உள்ளன.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரூ.74.70 கோடியில் சென்னை மாநகராட்சியின் புதிய மன்றக்கூடம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
சென்னையின் கலாச்சாரச் சின்னம் : புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“எந்த பாசிச சக்திகளாலும் ஒன்றும் செய்ய முடியாது” : கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“எங்களுக்கு யாரைக் கண்டும் எந்த பயமும் கிடையாது” : கனிமொழி எம்.பி அதிரடி!
-
“திராவிட மாடலின் சாதனைகள் தொடரும்; உழவர் வாழ்வு செழிக்கும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!