India
“பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போடுவதால் குழந்தைக்கும் நன்மை” - ICMR நிபுணர் விளக்கம்!
பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போடுவதால் தாய்க்கு உருவாகும் எதிர்ப்பொருள் குழந்தைக்கும் பயனுள்ளதாக இருக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தொற்றுநோயியல் பிரிவு தலைவர் டாக்டர் சமிரன் பாண்டா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “பாலூட்டும் தாய்மார்கள், கொரோனாவுக்கு எதிராக எந்த தயக்கமும் இல்லாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போடுவதன் காரணமாக தாய்க்கு உருவாகும் எதிர்ப்பொருள், தாய் பாலூட்டும்போது குழந்தைக்கும் சென்று பயனுள்ளதாக இருக்கும்.
நோய் எதிர்ப்புச் சக்தி, எதிர்ப்பொருள்களை மட்டும் சார்ந்தது அல்ல என்பதால், எதிர்ப்பொருள் பரிசோதனைக்கு செல்வது வீண். உடலில் உருவாகும் எதிர்ப்பொருட்கள், கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் எதிர்ப்பொருட்களாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.
ஒருவர் தடுப்பூசி போடும்போது இரு வகையான நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகிறது. ஒன்று எதிர்ப்பொருளை சமநிலைப்படுத்தும். இரண்டாவது செல் மத்தியஸ்த நோய் எதிர்ப்பு சக்தியாகும். மூன்றாவது மற்றும் மிக முக்கியமான ஒன்று நோய் எதிர்ப்பு சக்தி. இந்த நோய் எதிர்ப்பு சக்தி, தடுப்பூசி போட்ட பின்பு ஏற்படுகிறது இது உடல் செல்லில் இருக்கிறது. வைரஸ் உடலில் நுழையும்போது, இது எதிர்த்துச் செயல்படுகிறது.
ஆஸ்துமா, தூசி அலர்ஜி, மகரந்த துகள் அலர்ஜி உள்ளவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இணை நோய் உள்ளவர்களும், உடல்நிலை சீராக இருந்தால், தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். நீரிழிவு நோய் உள்ளவர்களும், இதர பிரச்னைகள் உள்ளவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது. ஏனென்றால் அவர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான அபாயம் அதிகம்.
புதிய வகை கொரோனா பரவும் நிலையில் ஏற்கெனவே கூறப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சையில் எந்த மாற்றமும் இல்லை. ஏற்கெனவே உள்ள கொரோனா வகையாக இருந்தாலும், புதிய வகை கொரோனாவாக இருந்தாலும், அனைத்து வகைகளும், பரவும் விதம் ஒரே மாதிரியானதுதான். முகக்கவசம் அணிவது, கூட்டம் உள்ள இடங்களை தவிர்ப்பது, கிருமிநாசினி ஆகியவை இன்னும் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் திறமையான நடைமுறைகளாக உள்ளன.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“வடசென்னையை வளர்ந்த சென்னையாக மாற்ற ரூ.8,000 கோடி ஒதுக்கீடு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
சென்னையில் ரூ.13.56 கோடியில் நவீன வசதிகளுடன் ‘முதல்வர் திருமண மாளிகை’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“இனி ‘கருணை’ இல்லை! ‘உரிமை’தான்!” : ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நன்றி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
அசாம் பா.ஜ.க.வின் வெளிப்படையான வெறுப்பு! : இஸ்லாமியர்களை அச்சுறுத்துவதற்காக தண்டனை இல்லையா?
-
“தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் : தலையிட்டு தீர்வு காணவேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!