India
வேளாண் சட்டங்களை தொடர்ந்து எரிவாயு விலை உயர்வுக்கும் எதிர்ப்பு - போராட்டத்தை அறிவித்த விவசாயிகள்!
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக உள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து பல மாதங்களால டெல்லி மாநில எல்லைகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
அதன்படி ஜூலை 8ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை அனைவரும் டிராக்டர், விவசாய வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் நிறுத்தி போரட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.
மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் போது நாடாளுமன்றம் அருகே போராட்டம் நடத்தப் போவதாகவும் கூறியுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்னையை தினமும் எழுப்ப வலியுறுத்தி அனைத்து எதிர்கட்சிகளுக்கும் கடிதம் எழுத உள்ளதாகவும் ஒருங்கிணைந்த விவசாயிகள் கூட்டமைப்பு கூறியுள்ளது.
Also Read
-
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ்நாட்டை கட்டமைக்கும் திராவிட மாடல்: UmagineTN- துணை முதலமைச்சர் உதயநிதி
-
ரூ.13.81 கோடியை விடுவிக்க வேண்டும் : ஒன்றிய அரசின் வாரிய கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் வலியுறுத்தல்!
-
நம்பி வாங்க.. சந்தோஷமா போங்க.. ரூ.4.5 கோடி மோசடி.. பதுங்கியிருந்த பாஜக நிர்வாகியை தட்டி தூக்கிய போலீஸ்!
-
“காங்., திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது.. எனவே...” - செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்!
-
வேகமாக நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் : எங்கு, எப்போது கரையை கடக்கிறது தெரியுமா?