India
“ஒரே பல்பு.. ஒரு ஃபேன்.. மின்கட்டணம் ரூ.2.5 லட்சம்” : ஷாக்கான மூதாட்டி - பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் அவலம்!
மத்திய பிரதேச மாநிலம், குணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம் பாய் பிரஜாபதி. இவர் வீட்டு வேலைகள் செய்துகொண்டு ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் ஒரு விளக்கு மற்றும் டேபிள் ஃபேன் மட்டுமே உள்ளது.
இந்நிலையில், மூதாட்டியின் வீட்டிற்கு ரூபாய் 2.5 லட்சம் மின் கட்டணம் செலுத்தவேண்டும் என மின் ஊழியர்கள் கொடுத்த ரசீதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் அவர்களிடம், மாதம் ரூபாய் 300 முதல் 500 வரை தான் கட்டணம் வரும். இவ்வளவு பெரிய தொகை எப்படி வந்தது என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் சரியான பதில் சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டனர்.
பின்னர், ராம் பாய் பிரஜாபதி மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்று முறையிட்டுள்ளார். ஆனால் யாரும் அவருக்கு சரியாக பதில் கூறவில்லை. மேலும் கடந்த ஏழு நாட்களாக மின்வாரிய அலுவலகத்திற்கும், வீட்டிற்குமாக நடையாக நடந்து வருகிறார் மூதாட்டி. அப்போது கூட அவருக்கு எந்த ஒரு அதிகாரியும் உதவ முன்வரவில்லை.
இதுகுறித்து மூதாட்டி கூறுகையில், "எனது வீட்டில் ஒரு விளக்கு மற்றும் டேபிள் மின்விசிறி மட்டுமே உள்ளது. ஆனால் எனது வீட்டிற்கு ரூபாய் 2.5 லட்சமாக மின் கட்டணம் வந்துள்ளது. இதுகுறித்துக் கேட்டுக் கடந்த பல நாட்களாக மின்சாரத் துறை அலுவலகத்திற்கு வந்து செல்கிறேன். ஆனால் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. இவ்வளவு பெரிய தொகையை என்னால் கட்ட முடியாது. எனவே எனக்கு அரசு உதவி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில் உரிய விளக்கத்தைக் கேட்டுப் பெற வேண்டும்!” : உதயநிதி அறிவுறுத்தல்!
-
“அயலகத்தில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய தவெக அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!
-
“அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்ட நிதி.. மலேசியாவில் தவிக்கும் மாணவர்கள்” : அன்பில் மகேஸ் கண்டனம்!
-
தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் : அரசின் நடவடிக்கை என்ன? - பேரவையில் மனோஜ் பாண்டியன் கேள்வி!
-
டெண்டரில் முறைகேடு.. முதலமைச்சர் அலுவலகத்திலேயே நடந்த ஊழல்? - பகீர் கிளப்பும் செய்தியின் பின்னணி என்ன?