India
“டெல்டா பிளஸ் வைரஸ் தீவிர பாதிப்பை ஏற்படுத்துமா?” : ஒன்றிய அரசின் நிதி ஆயோக் நிர்வாகி சொல்வது என்ன?
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வைரஸ் நாட்டின் 11 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 10 பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை இந்தியாவை தாக்குவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வைரஸ்தான் கொரோனா மூன்றாவது அலையை உருவாக்குமோ என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. மேலும் இது எப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில், டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் வேகமாக பரவுமா அல்லது தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துமா என்பதை இப்போதைக்கு கூற முடியாது என நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வி.கே.பால் கூறுகையில், கொரோனா மூன்றாவது அலை எப்போது ஏற்படும் என்பதை கூற முடியாது. புதிய அலை உருவாவதும் உருவாகாமல் இருப்பதும் நம் கைகளில் உள்ளது. உருமாறிய டெல்டா பிளஸ் என்ற புதிய வகை வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் 11 மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் பரவல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த டெல்டா பிளஸ் வைரஸ் வேகமாக பரவும் தன்மை உடையதா தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துமா என்பதை இப்போதே கூற முடியாது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“விஸ்வகுரு, விசுவாசம் இல்லாத குருவாகக் காட்டிக் கொண்டுவிட்டார்” - மோடியை விமர்சித்த முரசொலி தலையங்கம்!
-
“பள்ளி விடுமுறை நாட்களில்தான் கூட்டம் கூட்டுவார்..” - விஜய்க்கு தக்க பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி!
-
“இதையெல்லாம் 50 வருடங்களாக பார்த்துவிட்டேன்..” - அவதூறு பரப்புபவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக.. அண்ணா பிறந்தநாளில் அன்புக்கரங்கள் திட்டம் - தொடங்கி வைக்கிறார் முதல்வர்!
-
கிருஷ்ணகிரியில் 2 லட்ச பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.. வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!