India
“பள்ளிகள் திறக்க இதுதான் ஒரு வழி”: எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா சொல்வது என்ன?
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ துவங்கியதிலிருந்தே பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இரண்டு வருடங்களாக இணைய வழியிலேயே பாடம் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கல்லூரிகளுக்கு மட்டும் இணை வழியில் தேர்வுகள் நடத்தப்பட்டும் வருகிறது.
அதேநேரம், பள்ளி மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்த முடியாத சூழல் இருப்பதால், அனைவரும் தேர்ச்சி என மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இருந்தபோது மாணவர்களின் கல்வி முற்றாகப் பாதித்துவிடக் கூடாது என்பதற்காக இணையவழியில் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே பள்ளிகள் திறப்புக்கான ஒரு வழி என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரன்தீப் குலேரியா கூறுகையில்,"குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது செய்வது ஒரு மைல்கல் சாதனையாகும். மேலும் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கும் அவர்களுக்கான வெளிப்புற நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கும் தடுப்பூசி மட்டுமே வழி வகுக்கும்.
2 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட சோதனை முடிவுகள் தரவு செப்டம்பர் மாதத்திற்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பிறகு ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு பிறகு இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி கிடைக்கும்.
கொரோனா தொற்றுநோயால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குழந்தைகளுக்கான கல்வி பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்றால் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவது மட்டுமே சிறந்த வழியாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தமிழ்நாட்டிற்கான சிறப்புத் திட்டங்கள் பட்டியல் போட முடியுமா? : பிரதமர் மோடிக்கு முரசொலி கேள்வி!
-
2016–2022ம் ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் அறிவிப்பு: யாராருக்கு என்னென்ன விருதுகள்: முழு விவரம் இதோ!
-
அறிவுசார் நகரத்தை நோக்கி தமிழ்நாடு - முன்னணி கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
ரூ.913 கோடி முதலீடு... 13,080 பேருக்கு வேலைவாய்ப்பு : சர்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் புதிய ஒப்பந்தங்கள்!
-
அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகை : 10 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!