India
“அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்த பிறகு உங்கள் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியை தொடருங்கள்” : ராகுல் காந்தி சாடல்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது தொற்று குறைந்து வருகிறது. இருப்பினும் மூன்றாவது அலை விரைவில் இந்தியாவை தாக்கும் என உலக சுகாதார அமைப்பு மற்றும் மருத்துவ வல்லுநர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து, மூன்றாவது அலையிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மூன்றாவது அலையை எதிர்கொள்ள ஒன்றிய, மாநில அரசுகள் தாயார் நிலையில் உள்ளன.
இருப்பினும் ஒன்றிய அரசு தடுப்பூசிகளை நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப கொள்முதல் செய்யாததால் பல மாநிலங்களில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் 4% மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதனால் மூன்றாவது அலை வருவதற்குள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்துவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசிகள் கிடைத்த பிறகு 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசுங்கள் என பிரதமர் மோடியைக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டரில், “நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் முதலில் தடுப்பூசி கிடைக்கச் செய்யுங்கள். அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்தபிறகு, 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் உரையாற்றுங்கள்” என பதிவிட்டுள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் விதிகம் குறித்த ஒரு வரைபடத்தையும் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Also Read
-
“எத்தனை விருது கிடைத்தாலும், தமிழக அரசின் விருதுகளான ‘தாயின் முத்தத்திற்கு’ ஈடாகாது!” : உதயநிதி பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள்! : முழு விவரம் உள்ளே!
-
“எடப்பாடி பழனிசாமியின் வாயை, நம் முதலமைச்சர் இன்றைக்குத் தைத்துவிட்டார்!” : அமைச்சர் ரகுபதி!
-
தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.122.19 கோடியில் புதிய கட்டடங்கள்.. 360 புதிய வாகனங்கள்! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் ரூ.3,510 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம்! : MoU கையெழுத்தானது!