India
புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 6,148 பேர் பலி? : இறப்பு அதிகரிப்பு ஏன்? - ஒன்றிய அரசு விளக்கம்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு தொற்றின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 94,052 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த மூன்று நாட்களாக ஒரு லட்சத்துக்கும் கீழ் தொற்று எண்ணிக்கை பதிவாகி வருகிறது.
மேலும், படிப்படியாகக் குறைந்து வைந்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை இன்று அதிரடியாக உயர்ந்து புதிய உச்சமாக 6,148 பேர் தொற்றால் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் இந்த எண்ணிகைப் பதிவாகியிருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து உயிரிழப்பு எண்ணிக்கை ஏன் அதிகரித்தது என்று ஒன்றிய அரசு விளக்கம் கொடுத்துள்ளது. இதில், கடந்த 24 மணி நேரத்தில் 6,148 பேர் உயிரிழக்கவில்லை என்றும் 2,197 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
மேலும், பீகார் மாநிலத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை மறுகணக்கீடு செய்த போது 3,951 உயிரிழப்பு எண்ணிக்கை விடுபட்டது தெரியவந்தது. பின்னர் இந்த எண்ணிக்கையை இன்றை கொரோனா பாதிப்புடன் சேர்த்ததால் 6,148 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து ஒரு மாநிலத்தில் மட்டும் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரணங்கள் விடுபட்டு, பின்னர் மீண்டும் சேர்க்கப்பட்டிருப்பது, ஒன்றிய அரசு தெரிவித்து வரும் கொரோனா புள்ளி விவரங்கள் மீது சந்தேகத்தை எழுப்புவதாக சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Also Read
-
“கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? தமிழ்நாடு தலைகுனியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
நிதி ஒதுக்காமல் ஏமாற்றும் பிரதமர் மோடி : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்தது தமிழ்நாடு!
-
“இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்” - 80வது முறை கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!
-
கொருக்குப்பேட்டை மேம்பாலம் திறப்பு... எண்ணூர் மேம்பாலத்துக்கு அடிக்கல்.. ஒரே நேரத்தில் அசத்திய முதல்வர்!
-
எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் : உலகம் தழுவிய தமிழ் - அமைச்சர் தங்கம் தென்னரசு!