India
“ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை காணவில்லை” - தடுப்பூசி பற்றாக்குறை விவகாரத்தில் ப.சிதம்பரம் சாடல்!
‘தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது’ என்று மார்தட்டிய ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை என ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை எழுந்துள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட பல பெரும்பாலான மாநிலங்களில் தடுப்பூசி இல்லாததால் தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டுள்ளன. மோடி அரசின் தடுப்பூசி கொள்கையே பற்றாக்குறைக்குக் காரணம் என மாநில அரசுகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், “தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் கோவிட் தடுப்பூசி மருந்து இருப்பு இல்லை. தடுப்பூசி போடுவது ஜூன் 2ம் தேதியிலிருந்து ஏறத்தாழ மாநிலம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் கொள்முதல் கொள்கைகள்தாம் இந்நிலைக்கு முழுமுதற் காரணம்.
'தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது' என, நாள்தோறும் மார்தட்டிய ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாள்களாகக் காணவில்லை என்பதைக் கவனித்தீர்களா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் திடீரென அசாதாரணமான 6 % மாறுபாடு ஏற்பட்டது ஏன்? - சீதாராம் யெச்சூரி கேள்வி !
-
பா.ஜ.க.வினரால் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள் : கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
நிலவின் துருவங்களில் உறைந்திருக்கும் தண்ணீர் : இஸ்ரோவின் ஆய்வில் கிடைத்த உலகை அதிரவைத்த தகவல் !
-
ஜனநாயகத்தன்மையை இழக்கும் இந்தியா : RSF வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
-
உலகப் பத்திரிகை சுதந்திர நாள் ; ஊடகவியலாளருக்கு திராவிட மாடல் அரசு அளித்த உதவிகள் என்னென்ன ?