India
குவிந்து கிடக்கும் குப்பைகள்; பன்றிகள் சுற்றித் திரியும் அவலம்; நோய் பரப்பும் கூடாரமான பீகார் மருத்துவனை!
பீகார் மாநிலம் தர்பங்கா பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான அரசு மருத்துவமனை உள்ளது. தற்போது இந்த மருத்துவமனையில் ஏராளமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனையைச் சுற்றிலும் சாக்கடை நீர் தேங்கி நிற்பதால், நோயாளிகளும், மருத்துவர்களும் அவதிப்படுகின்றனர். மேலும் இங்குச் சாதாரணமாக மழை பெய்தாலே மருத்துவமனை முழுவதும் சாக்கடை நீர் தேங்கிவிடும் என்கிறார்கள் நோயாளிகள்.
அதுமட்டுமில்லாமல், தொடர் மழைபெய்தால் மருத்துவமனையின் கீழ் தளம் வரை தண்ணீர் தேங்கி நிற்கும் என நோயாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மருத்துவமனையின் அருகே கழிவுகள், கொட்டப்படுவதால், பன்றிகளின் கூட்டம் கூட்டமாக வந்து மருத்துவமனையைச் சுற்றிப் பார்த்துவிட்டுச் செல்கின்றன.
இந்த மருத்துவமனை அமைத்து 100 ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஒரு முறை கூட புனரமைக்கப்படாததால், கட்டிடங்கள் இடித்து விழும் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதேபோல் மருத்துவமனையின் உள்பகுதியிலும் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை என நோயாளிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.
கொரோனா பரவல் உச்சமடைந்து வரும் நிலையில், கொரோனா நோயாளிகள் மருத்துவமனையை நாடிவரும் நிலையில், மருத்துவமனையே நோயைப் பரப்பும் இடமாக இருக்கிறதே என மருத்துவர்களும், நோயாளிகளும் வேதனையுடன் கூறுகின்றனர். இம்மாநிலத்தின் முதல்வராக நிதிஷ்குமார் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சிறந்த கைவினைஞர்களுக்கு மாநில விருதுகள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
-
ரூ.145 கோடியில் தொழிற்பேட்டைகள், தொழிலாளர்கள் தங்கும் விடுதி... திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
ஒரே மாதத்தில் 46,122 தெருநாய்களுக்கு தடுப்பூசி.. சென்னை மாநகராட்சி தகவல்! - முழு விவரம் உள்ளே!
-
“இளையராஜா மீது முதலமைச்சர் பாசம் வைத்ததற்கு இதுதான் காரணம்...” - முரசொலி தலையங்கம் நெகிழ்ச்சி!
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !