India
பிரதமராக 7 ஆண்டுகளை நிறைவு செய்யும் மோடி; மே 26-ஐ கருப்பு தினமாக அனுசரிக்க விவசாயிகள் முடிவு!
பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ள மத்திய மோடி அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் எல்லைகளில் பஞ்சாப், ஹரியானா, என பல்வேறு வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு மாதம் முதலே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
கொரோனா பரவலின் இரண்டாவது அலைக்கு இடையேவும் தங்களது போராட்டத்தை கைவிடாமல் பொது அமைதிக்கு எவ்வித பங்கமும் விளைவிக்காமல் உரிமையை நிலைநாட்டும் எண்ணத்தில் உறுதியோடு உள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகளின் போராட்டம் ஆறு மாதங்களை எட்டியதை அடுத்து வருகிற மே 26ம் தேதியை கருப்பு தினமாக கடைபிடிக்கப்போவதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு போராட்ட இடங்களிலும், வீடுகளிலும், கிராமங்களிலும் தனித்தனியாக கூட்டம் சேர்க்கப்படாமல் பல வடிவங்களில் கருப்பு தினப் போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது போக, மே 25 ஆம் தேதிக்குள் விவசாய கருப்பு சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். இல்லை என்றால் போராட்டம் அடுத்த கட்டத்துக்குச் செல்லும் என்று கெடுவிதித்து பிரதமருக்கு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நேற்று கடிதம் எழுதினர்.
இதனைத் தொடர்ந்து இன்று கருப்பு தின போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனிடையே 26 ஆம் தேதி கருப்பு தின போராட்டத்தில் கலந்துகொள்ள கூடுதல் பஞ்சாப் விவசாயிகள் டெல்லி புறப்பட்டுள்ளனர்.
மேலும் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று 7 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டும் மே 26ம் தேதி கருப்பு தினமாக கடைபிடிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
வெள்ளை அறிக்கை : “‘Sorry Bro’ என்று சொல்வதற்கு 210 பக்கமா?” - முரசொலி கடும் தாக்கு!
-
“ஒரு மாவட்டத்தில் மட்டும்.. 18 நாட்களில்.. 17 போக்சோ வழக்குகள்” - அதிரவைக்கும் தகவல்களின் முழு விவரம்!
-
“FIFA WorldCup.. ‘கால்பந்து குழந்தை இயேசு’ ரசிகர்களின் அளவிலா அன்பு” - சுவாரசிய சம்பவத்தின் பிண்ணனி!”
-
“கம்பீர் தேவையில்லை.. இந்திய அணிக்கு தோனியை கொண்டு வாருங்கள்… முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து!”
-
இட்டுன்னு போயி இட்டுன்னு வருவதுதான் அமைச்சரின் வேலை என நினைக்கிறாரா? : தி.மு.க ஐடி விங் கேள்வி!