India
விலைக்கு வாங்கும் பா.ஜ.கவில் இருந்தே விலகிய 2 எம்.எல்.ஏக்கள் : அசாமில் தோல்வி பயத்தில் மோடி- அமித்ஷா!
அசாம் மாநிலத்தில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாகத் தேர்தல் பரப்புரையிலும், வேட்பாளர்கள் அறிவிப்பிலும் மும்மரமாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், பா.ஜ.கவை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏக்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் கட்சியிலிருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தின் ஹொஜாய் தொகுதியின் ஷிலத்யா தேவ் மற்றும் சில்சர் தொகுதியின் தீலீப் குமார் பால் ஆகியோர் 30 ஆண்டுகளுக்கு மேலாக பா.ஜ.கவில் உள்ளனர். இவர்கள் இருவரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால், பா.ஜ.க வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில், தங்கள் பெயர் இடம்பெறாததை அடுத்து பா.ஜ.கவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். மேலும் சுயேச்சையாக தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அவர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.
முன்னதா, பா.ஜ.கவின் மூத்த தலைவரும், அமைச்சராகவும் இருந்த சும் ரோங்ஹாங், கடந்தவாரம் பா.ஜ.கவிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். தற்போது இரண்டு எம்.எல்.ஏக்கள் பா.ஜ.கவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வருவது நரேந்திர மோடிக்கும், அமித்ஷாவுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!