India
“கலால் வரி வருமானத்தை வைத்து பாக்கெட்டை நிரப்பும் மோடி அரசு” - காங்கிரஸ் குற்றச்சாட்டு!
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கௌரவ் வல்லப், கடந்த ஆறு ஆண்டுகளில் உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி 53.66 மெட்ரிக் டண்ணாகக் குறைந்துவிட்டதாகக் கூறினார்.
பெட்ரோலின் அடிப்படை விலை 32ரூ 40 காசுகள்தான். ஆனால் மத்திய அரசு அதன் மீது 32ரூ 98 காசுகள் கலால் வரியை விதிக்கிறது. இப்படி 100 சதவீதம் வரி விதிப்பதன் மூலம் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது.
அதன் காரணமாக விலைவாசியும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளாதாகக் கூறினார். கடந்த ஆண்டு ஏப்ரல்மாதம் கச்சா எண்ணெய் விலை 19.90 டாலராகக் குறைந்த போதும் மத்திய அரசு பெட்ரோல் விலையைக் குறைக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
பெட்ரோல், டீசல் வரியைத் தொடர்ந்து உயர்த்தியதன் மூலம் அரசு 21.5 லட்சம் கோடி ரூ வசூலித்திருப்பதாகவும் கூறினார். இந்த பெட்ரோல், டீசல் வரி வசூலை நம்பித்தான் அரசு தாக்குப்பிடித்து வருவதாக அவர் கூறினார்.
பிப்ரவரி ஒன்றாம் தேதி பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீது செஸ் வரியை மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார். ஆனால் விலை உயராது என்று கூறினார். இந்த மாதம் மட்டும் 13 முறை அரசு விலையை உயர்த்தி உள்ளது. இதுதான் மத்திய அரசின் வாக்குறுதி என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
Also Read
-
அமித்ஷா பேச்சை கேட்டு ரங்கசாமி சிரிக்கிறார் : இரட்டை எஞ்சின் புதுச்சேரியிலும் டப்பா எஞ்சின் தான்!
-
“மகளிர் உரிமைத் தொகையை தடுக்க சிலர் சூழ்ச்சி செய்தார்கள்.. ஆனால்...” - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
5 ஆண்டுகளில் பிரம்மாண்டமான வளர்ச்சி... 10 அத்தியாயங்களை பட்டியலிட்ட பொருளாதார ஆய்வறிக்கை - முழு விவரம்!
-
மக்களின் பேராதரவோடு... 100 தொகுதிகளை நெருங்கும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை !
-
அருவருக்கத்தக்க பேச்சு.. திமுக பெண் MP-க்கள் முதல் திரிஷா வரை.. நயினார் நாகேந்திரனுக்கு குவியும் கண்டனம்!