India
சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பிறகும் நீடிக்கும் போராட்டம்.. வேளாண் கருப்பு சட்ட நகலை எரித்த விவசாயிகள்..!
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் விவசாயிகள் போராட்டம் மாற்றமில்லாமல் தொடர்கிறது. இன்று வேளாண் சட்டங்களை எரித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியின் எல்லைகளில் விவசாயிகளின் போராட்டம் 49வது நாளை எட்டியுள்ளது.
போகிப் பண்டிகையை முன்னிட்டு அதிகாலை மூன்று மணிக்கு வேளாண் கருப்பு சட்டங்களையும் எரித்து போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
டெல்லியில் போராட்டம் நடக்கக்கூடிய ஒவ்வொரு இடங்களிலும் சட்டங்களை எரித்து விவசாயிகள் போராட்டம் நடத்த இருப்பதாக கூறி உள்ளனர். அதேபோன்று பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் விவசாயிகள் தங்களுடைய கிராமங்களில் இந்த சட்டங்களை எரிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து இன்று விவசாய சங்கங்கள் தொடர் ஆலோசனைகளை நடத்த உள்ளனர்.
சட்டங்களை செயல்படுத்த உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து, கருத்துக் கேட்புக் குழு அமைத்துள்ள நிலையில் ஏற்கனவே அறிவித்துள்ள 15ஆம் தேதி பேச்சுவார்த்தையை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பது தொடர்பாக மத்திய அரசும் இன்று ஆலோசனை நடத்துகிறது.
விவசாயிகள் அறிவித்துள்ள குடியரசு தின டிராக்டர் பேரணிக்கு தடைகோரி மத்திய அரசு தொடர்ந்துள்ள வழக்கு வேளாண் சட்ட வழக்கோடு இணைக்கப்பட்டு 18 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது, தீர்ப்புக்குப் பின் எழுந்துள்ள சூழ்நிலை குறித்து உச்ச நீதிமன்றம் மீண்டும் ஆராய வாய்ப்புள்ளது.
இதனிடையே திருவள்ளூர் மாவட்டத்தில் போகி பண்டிகையை முன்னிட்டு வேளாண் சட்ட நகலை விவசாயிகள் பொதுமக்கள் தீயிட்டு எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
Also Read
-
”இது முட்டாள்தனம்” : ஹரியானா வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற பிரேசில் மாடல் Reaction!
-
நலம் காக்கும் ஸ்டாலின்: அரசு நடத்தும் 10 சிறப்பு போட்டிகள்.. எப்போது? யார் யார் பங்கேற்கலாம்? - விவரம்!
-
KGF நடிகர் திடீர் மரணம் : சக நடிகர்கள் இரங்கல்!
-
”உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் அரசு விதிகளுக்கு உட்பட்டே பதவி உயர்வு” : பதிவுத்துறை விளக்கம்!
-
சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த பைக் : உயிர்தப்பிய நண்பர்கள் - நடந்தது என்ன?