India
“கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக அவசர அவசரமாக தடுப்பூசி பயன்பாடு?” - மருத்துவர்கள் சந்தேகம்!
கொரோனா தடுப்பூசி சோதனை முடிவுகளை வெளிப்படையாக வெளியிட வேண்டும் எனவும் முழுமையான சோதனைகளுக்குப் பிறகே பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அச்சங்கத்தின் நிர்வாகிகள் கூறுகையில், “ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்குள் தடுப்பூசிகளை அனைவருக்கும் போட வேண்டும். அப்பொழுதுதான் சமூக எதிர்ப்பு சக்தியை (Herd Immunity) தடுப்பூசிகள் மூலம் பெற முடியும். முழுமையான பயனைப் பெற முடியும்.
இந்தியாவில் பயன் படுத்தப்பட உள்ள கோவிட் தடுப்பூசிகளின் திறன், பாதுகாப்பு குறித்த ஆய்வுகளின் முடிவுகளை முழுமையாக வெளிப்படையாக வெளியிட வேண்டும்.
கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையை முழுமையாக முடிக்காமல் தடுப்பூசியை பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது மக்களிடையே தடுப்பூசி மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும்.
மத்திய அரசு அரசியல் நோக்கத்திற்காக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பொருளாதார ரீதியில் உதவுவதற்காக அவசர அவசரமாக தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டுவருகிறது.
கொரோனா தடுப்பு மருந்து பயன்படுத்துவதில் வெளிப்படைத் தன்மை இருக்கவேண்டும். யார் யாருக்கு என்ன மருந்து செலுத்தப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!