India
“மோடி அரசின் தடுப்பு நடவடிக்கையால் தொற்று குறைந்ததாக பா.ஜ.கவினர் பொய் பிரச்சாரம்”: கொரோனா நிலவரம் என்ன?
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று. வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 46,232 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 90,50,598 ஆக உயர்ந்திருக்கிறது.
ஒரே நாளில் 564 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து 1,32,726 பேர் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள். மேலும், ஒரே நாளில் 49,715 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 84,78,124 ஆக ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, 4,39,747 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேவேளையில், குணமடைந்தோர் விகிதம் 93.67% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.47% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 4.86% ஆக குறைந்துள்ளது.
இந்நிலையில் நாள்தோறும் கொரோனா தொற்று அதிகரிக்கின்ற சூழலில், மோடி அரசின் தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக பா.ஜ.கவினர் பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஒருவாரத்தில் மட்டும் இந்தியாவில் 1.30 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகிறது. இதனிடையே புள்ளிவிவரங்களைக் கொண்டு பா.ஜ.கவின் பொய் பிரச்சாரங்களை, சமூக வலைதளங்களில் பலரும் அம்பலப்படுத்தி வருகின்றனர்.
Also Read
-
விதிமீறல்களுக்கு பெயர்போன பா.ஜ.க! : நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம்!
-
பாகிஸ்தான் உதவியை நாடும் பா.ஜ.க! : தேர்தல் விதிமுறைகளை தகர்க்கும் மோடி அரசு!
-
குற்றவாளிகளுக்கு தரப்படும் ஜாமீன், முதல்வர்களுக்கு மறுக்கப்படுகிறது : பா.ஜ.க.வின் அடக்குமுறை அரசியல்!
-
”திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் மனங்களில் தாண்டவமாடும் மகிழ்ச்சி” : கி.வீரமணி வாழ்த்து!
-
”அரசியல் சாசனம் இல்லாமல் நாட்டை ஆட்சி செய்ய நினைக்கும் மோடி” : ராகுல் காந்தி தாக்கு!