India
8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற பரிந்துரை - தொழிலாளர் விரோத மோடி அரசின் அடுத்த திட்டம்!
கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வரும் நிலையில், மத்திய பா.ஜ.க அரசு, தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
நாளொன்றுக்கு 8 மணி நேர வேலை என்பதை 12 மணி நேரமாக மாற்ற மத்திய தொழிலாளர் நலத்துறை மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பணிப் பாதுகாப்பு, சுகாதாரம், சூழல் மேம்பாடு குறித்த சட்டம் தொடர்பாக வரைவு ஆணை நேற்று வெளியாகியுள்ளது. இந்த வரைவு ஆணையில் இடம்பெற்றுள்ளவை குறித்து ஆட்சேபம் மற்றும் ஆலோசனைகளை வழங்க 45 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், தொழிலாளர்களின் பணி நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கலாம் என தொழிலாளர் அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இது நாடு முழுவதுமுள்ள தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஏற்கனவே, பா.ஜ.க ஆளும் குஜராத், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கை என்ற பெயரில் தொழிலாளர்களின் பணி நேரத்தை 8 மணிநேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு, கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ஏன்? எப்படி? என்ன? - மக்களவையில் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த திமுக எம்.பி.-க்கள் - விவரம் உள்ளே!
-
பயோ மைனிங் முறை... சென்னை மாநகராட்சியில் 52.64 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம்!
-
தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு: ரூ.22,794 கோடி முதலீடு..127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.. விவரம்
-
Budget2026 : “தேர்தல் நாடகத்தில் கூட தமிழ்நாடு என்றால் பாஜக புறக்கணிக்கிறது..” - அமைச்சர் ரகுபதி கண்டனம்!
-
‘ஜூம்லாவும், ஒப்பனையும்’ நிறைந்த பட்ஜெட்! திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கடும் விமர்சனம்!