India
“கொரோனா நோயாளிகளுக்கு கண்மூடித்தனமாக பிளாஸ்மா சிகிச்சை அளிக்க கூடாது” : ICMR எச்சரிக்கை!
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதன் மூலம் உரிய பலன் கிடைப்பது என்பது உறுதிபடுத்தப்படவில்லை என்று ஆய்வுகள் தெரிவிப்பதாக ஐ.சி.எம்.ஆர் கூறியுள்ளது.
பிளாஸ்மா சிகிச்சை தொடர்பாக நாடு முழுவதும் 39 மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஆய்வுக்குப் பின்னர், ஐ.சி.எம்.ஆர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிளாஸ்மா ரத்தம் கொடுப்பவர்களையும், சிகிச்சை பெறுபவர்களையும் உரிய முறையில், தீவிரமாக ஆய்வு செய்த பின்னரே பிளாஸ்மா சிகிச்சை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், தொற்று ஏற்பட்ட 3 முதல் 7 நாட்களுக்குள் மட்டுமே பிளாஸ்மா வழங்கலாம். தொற்று ஏற்பட்டு பத்து நாட்களுக்கு மேல் ஆனால், பிளாஸ்மா வழங்கக்கூடாது. அதேபோல், ரத்தத்தில் ஆன்டிபாடி உருவாகி இருந்தாலும் அவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்க கூடாது என்று ஐ.சி.எம்.ஆர் அறிவுறுத்தியுள்ளது.
Also Read
-
திருக்கோயில் பயிற்சி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
-
வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு; ராசிபுரத்தில் டைடல் பூங்காவுக்கு அடிக்கல்: சாதனை படைத்த தமிழ்நாடு!
-
சென்னையில் ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை... வெற்றி கோப்பையை அறிமுகப்படுத்திய முதலமைச்சர் !
-
திருச்செங்கோடு மக்களுக்கு அடித்த ஜாக்பாட்... மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை... புதிய வசதிகள் என்ன ?
-
100 இடங்களில் வாக்காளராக இருந்த பெண்... ஹரியானா தேர்தலில் குளறுபடிகளை அம்பலப்படுத்திய ராகுல் காந்தி !