India
“கொரோனா நோயாளிகளுக்கு கண்மூடித்தனமாக பிளாஸ்மா சிகிச்சை அளிக்க கூடாது” : ICMR எச்சரிக்கை!
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதன் மூலம் உரிய பலன் கிடைப்பது என்பது உறுதிபடுத்தப்படவில்லை என்று ஆய்வுகள் தெரிவிப்பதாக ஐ.சி.எம்.ஆர் கூறியுள்ளது.
பிளாஸ்மா சிகிச்சை தொடர்பாக நாடு முழுவதும் 39 மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஆய்வுக்குப் பின்னர், ஐ.சி.எம்.ஆர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிளாஸ்மா ரத்தம் கொடுப்பவர்களையும், சிகிச்சை பெறுபவர்களையும் உரிய முறையில், தீவிரமாக ஆய்வு செய்த பின்னரே பிளாஸ்மா சிகிச்சை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், தொற்று ஏற்பட்ட 3 முதல் 7 நாட்களுக்குள் மட்டுமே பிளாஸ்மா வழங்கலாம். தொற்று ஏற்பட்டு பத்து நாட்களுக்கு மேல் ஆனால், பிளாஸ்மா வழங்கக்கூடாது. அதேபோல், ரத்தத்தில் ஆன்டிபாடி உருவாகி இருந்தாலும் அவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்க கூடாது என்று ஐ.சி.எம்.ஆர் அறிவுறுத்தியுள்ளது.
Also Read
-
இன்றுடன் ஓராண்டாக நீடிக்கும் மணிப்பூர் வன்முறை : வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
வயநாடு தொடர்ந்து மற்றொரு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி : எந்த தொகுதி? என்ன காரணம்?
-
மணிப்பூர் வன்முறை - கைகட்டி வேடிக்கை பார்த்த ஒன்றிய பா.ஜ.க. அரசும் குற்றவாளி அல்லவா? : முரசொலி!
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !