India
மாநிலங்களுக்கு நீட் தேர்வில் விலக்களிக்க மறுத்து மத்திய கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் தனி தேர்வா? #INICET
மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கான நீட் தேர்விலிருந்து மாநிலங்களுக்கு விலக்களிக்க மறுக்கும் மத்திய பா.ஜ.க அரசு, மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் தனி நுழைவுத்தேர்வை நடத்தவிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எம்.டி., எம்.எஸ் உள்ளிட்ட உயர் மருத்துவ படிப்புகளில் சேர INI-SET என்ற தனி நுழைவுத்தேர்வை மத்திய பா.ஜ.க அரசு நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட 11 கல்லூரிகளுக்கு நாட்டின் சீர்மிகு கல்வி நிறுவனங்கள் என அந்தஸ்து அளித்து ‘INI-SET' எனும் பெயரில் தனி நுழைவுத்தேர்வை மத்திய அரசு நடத்துகிறது.
நீட் தேர்விலிருந்து மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் விலக்கு அளித்துவிட்டு, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க மறுப்பது, மாநில உரிமைகளை அப்பட்டமாகப் பறிக்கும் செயல் எனக் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
நீட் தேர்விலிருந்து விலக்கு பெற விரும்பும் மாநிலங்களுக்கு, நீட்டிலிருந்து விலக்களிக்க, தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என மருத்துவ மாணவர்களும், எதிர்க்கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
Also Read
-
“தமிழ்நாட்டை பீகார், உத்தரப்பிரதேசமாக மாற்றிய த.வெ.க அரசு” : தி.மு.க அயலக அணி விமர்சனம்!
-
“ஈவு இரக்கமற்ற காட்டாட்சி...!" - த.வெ.க அரசை கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
-
“சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?” : மு.க.ஸ்டாலின் கேள்வி!
-
ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை குற்றங்கள்! : இம்மி அளவும் வாய் திறக்காத முதலமைச்சர் விஜய்!
-
“காவிரி நீரை மறந்துவிட வேண்டியது தான்!” : த.வெ.க ஆட்சிக்கு முரசொலி தலையங்கம் கண்டனம்!