India
“தமிழகத்தில் பட்டாசு வெடிக்க தடையில்லை... டெல்லியில் பசுமை பட்டாசு கூட வெடிக்கக்கூடாது” - N.G.T ஆணை!
டெல்லியில் பசுமை பட்டாசு உள்ளிட்ட அனைத்து வகை பட்டாசுகளையும் விற்கவும், வெடிக்கவும் முழுதடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்று தேசிய பசுமை தீர்ப்பாயம் வெளியிட்ட இடைக்கால உத்தரவில் டெல்லியில் காற்று மாசு அதிகமாக இருப்பதன் காரணமாகவும், கொரோனாவைக் கருத்தில் கொண்டும் டெல்லி பெருநகரம் முழுவதுமாக பட்டாசு விற்க வெடிக்க முழு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு டெல்லியில் பசுமை பட்டாசு வெடிக்க அனுமதித்த நிலையில், இந்த முறை பசுமை பட்டாசுகள் உள்பட எந்த வகை பட்டாசுகளும் வெடிக்க கூடாது என்று இன்றைய புதிய உத்தரவில் கூறப்பட்டிருக்கிறது.
நவம்பர் 9 முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை முழு தடை விதிப்பதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியிருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எந்தெந்த நகரங்களில் காற்று மாசு மோசமாக இருந்ததோ அந்த நகரங்களிலும் பட்டாசுக்கு தடை விதிக்கப்படுள்ளது.
அதே நேரத்தில் காற்று மாசு மிதமாக உள்ள நகரங்களில் ஏற்கனவே அந்த மாநிலங்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளை தொடரலாம் என்று கூறப்படுள்ளது. இதுவரை கட்டுப்பாடுகள் விதிக்காத மாநிலங்களில் தீபாவளி பண்டிகையன்று மட்டும் இரவு 8 மணிமுதல் 10 மணிவரை பட்டாசு வெடிக்க அனுமதிக்கலாம்.
அதேபோன்று கிறிஸ்துமஸ் தினத்தன்றும், புத்தாண்டு அன்றும் நள்ளிரவு 11:55 முதல் 12:30 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதிக்கலாம் என்று இன்றைய இடைக்கால உத்தரவில் கூறப்பட்டுள்ளது. வழக்கு மீண்டும் டிசம்பர் ஒன்றாம் தேதி விசாரணைக்கு ப் பட்டியலிடப்பட்டுள்ளது.
Also Read
-
“கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் வந்தது... ஆனால் இந்த ஆண்டு?” - விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!
-
காவிரி விவகாரம்.. முதலமைச்சர் உறக்கம் கலைத்து திருவாய் மலர்வது எப்போது?- முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி!
-
“விவசாயிகளுக்காக தஞ்சையில் திரண்ட கழகம்.. கோரிக்கை நிறைவேறாவிட்டால்” : மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
‘இதுவே தி.மு.க. ஆட்சியில் நடந்திருந்தால்...?’ : தவெக-வின் அட்டூழியத்தை அடுக்கி கேள்வி எழுப்பிய முரசொலி!
-
“முதல்வர் விஜய்க்கு ஏன் ஈகோ.. அமைச்சர் நிர்மல்குமார் திமுக-வைப் பற்றி பேசினால்”: எச்சரித்த பரந்தாமன்!