India
டெல்லியில் 3-வது அலை தீவிரம்: முதல் முறையாக ஒரே நாளில் 7,178 பேர் பாதிப்பு - பொதுமக்களுக்கு எச்சரிக்கை !
டெல்லியில் குளிர் மற்றும் காற்று மாசு காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா மூன்றாவது அலை வீசி வருகிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளது.
நேற்று இரவு டெல்லி அரசு வெளியிட்ட கணக்குப்படி, 7178 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 64 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 40 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் 9 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 4 லட்சத்து 23 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6833 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் முதல் அலை உச்சத்தில் எட்டிய ஜூன் மாதம் அதிகபட்ச தினசரி பாதிப்பு 3900 ஆக பதிவானது. இரண்டாவது அலை வீசிய செப்டம்பர் மாதம் 4500 ஆக உயர்ந்தது. தற்போது மூன்றாவது அலையின் போது முதல் முறையாக நேற்றைய பாதிப்பு 7178 ஆக உயர்ந்திருக்கிறது.
இந்த நிலை நீடித்தால் டிசம்பர் மாதத்தில் நாளொன்றுக்கு 15 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, பண்டிகை காலங்களில் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.
Also Read
-
முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வருண், வாஷிங்டன் சுந்தர்… கையில் கொடுத்த ஆச்சரியப் பரிசு: முழு விவரம்!
-
மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய ஓய்வறியாமல் உழைப்போம்: செல்வப்பெருந்தகை அழைப்பு!
-
‘நாம் தான் வெல்வோம்’ என்ற எண்ணத்தை எதிரிகளிடமும் ஏற்படுத்தியுள்ளோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (மார்ச் 17) முதல் ‘தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல்’! : முழு விவரம் உள்ளே!
-
“கழக அரசு மீது களங்கம் ஏற்படுத்த நினைத்தால் அதனைப் பெண்களே ஏற்க மாட்டார்கள்!” : முரசொலி தலையங்கம்!