India
இதுவரை 109 எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க தனியாருக்கு அனுமதி - நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் பதில்!
இதுவரை 109 எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க தனியாருக்கு அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எம்.பிக்களின் கேள்விகளுக்கு துறைவாரியான பதில்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. ரயில்வே துறை தனியார்மயம் செய்யப்படுவது குறித்த கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
அந்த பதிலில், 2030 ஆண்டுக்குள் ரயில்வே துறையை மேம்படுத்த ரூ.50 லட்சம் கோடி தேவைப்படுகிறது. பற்றாக்குறையை ஈடுகட்ட தனியாருடன் இணைந்து ரயில்களை இயக்கவும், திட்டங்களை செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக சென்னை உள்ளிட்ட 12 மண்டலங்களில் இருந்து ஜூலை 1 முதல் நாடு முழுவதும் 109 எக்ஸ்பிரஸ் ரயில்களை தனியார் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து டெல்லி, மும்பை, ஹவுரா, மதுரை, மங்களூர், மும்பை, கோவை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், பாசஞ்சர் ரயில்களை இயக்க தனியாருக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் பியூஷ் கோயல் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
Also Read
-
தமிழ்நாட்டில் ரூ.4,000 கோடி முதலீடு செய்யும் ஜியோ ஹாட்ஸ்டார் : 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!
-
பிரதமர் மோடி பாட வேண்டியது ‘வந்தே ஏமாத்துறோம்' : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
“பாவம், இந்தி பேசும் மக்களை ஏமாற்றலாம்.. ஆனால் தமிழ்நாட்டு மக்களை..” -பாஜகவை வெளுத்து வாங்கிய தயாநிதி MP!
-
உலக மனித உரிமைகள் நாள் : சுயமரியாதையைப் பாதுகாத்திட உறுதி ஏற்போம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வெல்லும் தமிழ்ப் பெண்கள் : மகளிர் உரிமைத் திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கம்.. எப்போது தொடக்கம்? -விவரம்!