India
கொரோனா பாதிப்பு: அரை கோடியை தாண்டியது இந்தியா.. இன்னும் பொய் சொல்ல என்ன இருக்கிறது மிஸ்டர் பிரதமரே?
இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய கொரோனா பரவல் பல ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்ட பிறகும் ஓயவில்லை. இதுகாறும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது.
நேற்றைய (செப்.,15) நிலவரப்படி கடந்த 15 நாட்களில் மட்டுமே 12 லட்சத்து 39 ஆயிரத்து 97 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதேச்சமயத்தில் இந்த காலகட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 488 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 90 ஆயிரத்து 123 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 லட்சத்து 20 ஆயிரத்து 359 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 1,290 ஆக பலியானதை அடுத்து மொத்த உயிரிழந்தோரின் எண்ணிக்க 82 ஆயிரத்து 66 ஆக அதிகரித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த 10 நாட்களில் அமெரிக்காவின் பாதிப்பையே மிஞ்சி உலகளவில் முதலிடத்தை இந்தியா பெரும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
Also Read
-
புகழ்பெற்ற மல்யுத்த வீரரை வீழ்த்திய வீராங்கனை... தோல்வியே சந்திக்காத இந்திய பெண்ணை கௌரவித்த Google!
-
இந்தியப் பெருங்கடலில் பல மடங்கு அதிகரித்த வெப்பநிலை : கால நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை !
-
பிரஜ்வல் ரேவண்ணாவை பிரதமர் மோடி எதற்காக பாதுகாத்து வருகிறார்? : ராகுல் காந்தி கேள்வி!
-
மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் புகார் : 8 பேர் கொண்ட குழுவை அமைத்து கொல்கத்தா போலீஸ் உத்தரவு !
-
ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் கே.ஜி.எஃப் விக்கி கைது : போலிஸ் அதிரடி!