India
#PUBG #LUDO உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை!
லடாக்கில் சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக மீண்டும் பதற்றம் நிலவுகின்ற நிலையில், இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள பப்ஜி உள்ளிட்ட 118 சீன மொபைல் ஆப்களை மத்திய அரசு தடை செய்துள்ளது.
இந்தியாவில் பப்ஜி கேமிங் ஆப்பின் பயனாளர்கள் மட்டும் கிட்டத்தட்ட 3.3 கோடி பேர் இருப்பார்கள். பதின் வயதினர் முதல் இளைஞர்கள் வரை ஆண்கள் பெண்கள் பேதமற்று பலர் விளையாடிவரும் வேளையில் அந்த கேம் ஆப்போடு சேர்த்து 118 செயலிகளை மத்திய அரசு தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
ஒரு நாளுக்கு பப்ஜி கேமை 1.3 கோடி பேர் விளையாடி வந்தார்கள். இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு உள்ளிட்டவற்றுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அந்த ஆப்கள் செயல்படுவதால், தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 69ஏ-ன் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சைபர் வெளியின் பாதுகாப்பை காக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது பல கோடி இந்தியர்களின் நலனை கருத்தில்கொண்டும் எடுக்கப்பட்ட முடிவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில ஆண்டிராய்ட் மற்றும் ஐஓஎஸ் மொபைல் ஆப்கள் பயனாளர்களுக்கே தெரியாமல் அவர்களைப் பற்றிய தரவுகளை சேகரித்து இந்தியாவுக்கு வெளியே அனுப்புவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இது போன்று குடிமக்களின் தரவுகள் வெளிநாடுகளுக்கு செல்வதால் அது தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“LPG விலையை ஏற்றுவது சரியல்ல” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
”MI-யுடன் CSK தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு என்னாகும்? காத்திருக்கும் CSK ரசிகர்கள்” : முழு விவரம்!
-
மோடி அரசின் தேர்தலுக்கான பரிசு இது : எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல் காந்தி எம்.பி கண்டனம்!
-
”கிடு கிடு விலை உயர்வில் சிலிண்டர்கள்.. 5 மாநில தேர்தல் முடிந்ததும் ஆட்டம் தொடக்கம்” : முழு விவரம் அறிக!
-
”சூடான வெப்பத்திற்கு இடையே வந்த மழை அறிவிப்பு.. எப்போது தொடங்கும் தென்மேற்கு பருவமழை” : முழு விவரம்!