India
“கொரோனா மருந்துக்கான அறிகுறியே இல்லை - மோடி அரசின் தயாரின்மையே காரணம்” : ராகுல் காந்தி சாடல்!
கொரோனா வைரஸ் தொற்று பல மாதங்களாகத் தேசமெங்கும் வரலாறு காணாத சேதாரத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை கொரோனாவால் 33 லட்சம் பாதிக்கப்பட்டிருக்கும் இச்சூழலில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு மற்றும் ஆய்வு என்பது இன்றியமையாததாக உள்ளது.
இந்த கொரோனா தொற்றை மத்திய அரசு எதிர்கொள்ளும் விதத்தில் அதனுடைய தயாரின்மை வெளிப்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். சர்வதேச அளவில் அமெரிக்கா மற்றும் பிரேசில் நாட்டுக்கு அடுத்தாக இந்தியா மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது அதே விஷயத்தைக் குறிப்பிட்டு, “ஒரு நியாயமான, அனைவருக்குமான கோவிட் தடுப்பு மருந்து வியூகம் இந்நேரம் உருவாகியிருக்கவேண்டும். ஆனால் அதற்கான அறிகுறியே இல்லை. இந்திய அரசின் தயாரிப்பின்மையை அச்சமூட்டுவதாக உள்ளது” என தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூலை 17-ம் தேதி இந்தியாவில் 10 லட்சம் கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டபோது ராகுல் காந்தி ஆகஸ்ட் மாதம் இந்தியா மற்றொரு 10 லட்சத்தையும் கடக்கும் என எச்சரித்தார். அது இப்போது நிகழ்ந்துள்ளது. கொரோனா தொற்று ஏற்படத்தொடங்கிய காலகட்டத்திலிருந்து ராகுல் காந்தி பல முக்கிய விஷயங்களைத் தொடர்ந்து பேசிவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?