India
‘பாலுக்கும் காவல் பூனைக்கும் நண்பன்?’ : நாடகமாகும் மோடி அரசு - சீனாவுக்கு 7.29 பில்லியன் டாலர் ஏற்றுமதி!
இந்திய சீன எல்லையில் இருநாட்டு இராணுவ வீரர்களுக்கும் இடையேயான மோதலால் இந்திய வீரர்கள் உயிரிழந்ததை அடுத்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உரசல் இருந்து வருகிறது. இதனையடுத்து மத்திய அரசு 59 சீன மொபைல் ஆப்களை தடை செய்து உத்தரவிட்டது.
மேலும் பா.ஜ.க ஆதரவாளர்களால் சீன பொருட்களை புறக்கணிப்போம் என்ற கோஷமும் முன்வைக்கப்பட்டது. அதேவேளையில், சீனாவும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியை அதிகரித்தது.
குறிப்பாக, இந்தியாவில் இருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆன்ட்டி டம்பிங் டியூட்டிக்கும் (Anti Dumping Duty) இந்திய கம்பெனிகளை பொறுத்து சுமார் 7.4 சதவீத்தில் இருந்து 30.6 சதவீதம் வரை வரி விதித்தது.
இந்நிலையில் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு தடையில்லாததால், கடந்த ஏப்ரல் மற்றும் ஜூலை மாதத்தில் மட்டும் 7.29 பில்லியன் டாலருக்கு பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுவே கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் - ஜூலை காலக்கட்டத்தில் இந்தியா சீனாவிற்கு 5.57 பில்லியன் டாலருக்கு மட்டுமே பொருட்களை ஏற்றுமதி செய்திருக்கிறது. இதனால் கடந்தாண்டைவிட இந்தாண்டு சுமார் 30.8 சதவீதம் அதிகமாக இந்தியா ஏற்றுமதி செய்திருக்கிறது.
இதனிடையே சீனாவுடன் ஏற்றுமதியை அதிகரித்த இந்தியா மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது மிகவும் குறைவாகும். அதாவது, இந்தியா கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் - ஜூலை மாதத்தில் ஒட்டுமொத்த உலக நாடுகளையும் சேர்ந்து சுமார் 104.14 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
ஆனால் 2020ம் ஆண்டு ஏப்ரல் - ஜூலை மாதத்தில் ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கு வெறும் 75.01 பில்லியல் டாலருக்கு மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது. இது ஏற்றுமதி அளவில் இருந்து சுமார் 29 சதவீதம் சரிந்துள்ளதையே காட்டுகிறது.
வெளியில், வர்த்தத்தில் சீனாவை புறக்கப்பணிப்பதாக சொல்லும் மோடி அரசு, அதிக வரி விதிப்பு என்றாலும் இந்திய பொருட்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வது ஏன்? இதனால் இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் லாபம் அடையுமா? என பொருளாதார வல்லுநர்கள் பலரும் கேள்வி எழுப்புயுள்ளனர்.
Also Read
-
“தமிழ்நாட்டின் நிதிப் பொறுப்பும் பட்ஜெட் மேலாண்மையும் கட்டமைப்பிற்குள் உள்ளது” : இந்து நாளேடு பாராட்டு!
-
தஞ்சையில் அடுத்த மகளிர் அணி மாநாடு! - தயாராகும் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” : முழு விவரம் உள்ளே!
-
“மதவாத அரசியல் போதையை தடுத்திட நாமெல்லாம் ஒன்று சேர வேண்டும்!” : திருச்சியில் முதலமைச்சர் பேச்சு!
-
தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டு 21 லட்சம் வாகனங்கள் பதிவு : கடந்த ஆண்டை விட 8.4% வாகனங்கள் விற்பனை!
-
2025 ஆம் ஆண்டில் 2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!