India
இந்தி தெரியாதெனில் அவமதிக்கப்படுவதை இன்னும் எத்தனை நாள் பொறுத்துக் கொள்ள போகிறோம்? - கனிமொழி எம்.பி
மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் 3 நாள் ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. அதில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயிற்சி மருததுவர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் இந்தி மட்டுமே பிரதானமாக பயன்படுத்தியது பங்கேற்றவர்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன் உச்சமாக, ஆயுஷ் அமைச்சக செயலாளர்,
ராஜேஷ் கொட்டேச்சா, இந்தி தெரியாதவர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறி விடலாம் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தி மு.க எம்பி கனிமொழி வெளியிட்ட டிவிட்டர் பதிவில் "
மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா, அமைச்சகத்தின் பயிற்சி வகுப்பில்,இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்று சொல்லியிருப்பது மத்திய அரசின் இந்தி திணிப்பு கொள்கையை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கிறது.இது கண்டிக்கத்தக்கது.மத்திய அரசு, உடனடியாக அந்த செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்னும் எத்தனை நாள் இந்தி தெரியாது என்றால் அவமதிக்க படுவதை, பொறுத்துக்கொள்ளப் போகிறோம் ?" என்று ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.
Also Read
-
“நாடாளுமன்றத்தில் தமிழ் முழக்கம் - தாய்மொழிக்கு பெருமை சேர்த்த தமிழ்நாட்டு MP-க்கள்” - முரசொலி புகழாரம்!
-
குடும்பத்தினர் வருகையால் குதூகலமான BB வீடு : பாரு-கமரு தனி தனியா game ஆடுங்க என்று அறிவுரை கூறிய நண்பன்!
-
ரயிலுக்கு இடையே சிக்கிக் கொண்ட பெண் : உயிர் காத்த RPF வீரர் - குவியும் பாராட்டு!
-
வாக்குறுதி கொடுத்த அடுத்த நாளே 169 செவிலியர்கள் பணிநிரந்தரம் : ஆணைகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
கிறிஸ்துமஸ் விழாவில் இரட்டை வேடம் போடும் பா.ஜ.க : தி.க தலைவர் கி.வீரமணி ஆவேசம்!