India
2 கோடி பேரின் வாழ்வை இருள் மயமாக்கிவிட்டு ஃபேஸ்புக்கில் வெறுப்பை உமிழும் பாஜக அரசு - ராகுல்காந்தி காட்டம்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 26 சதவிகிதம் வரை சரியும் என பொருளாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும் கடந்த 9 வாரங்களில் புதிய உச்சமாக வேலையில்லா திண்டாட்டம் 9.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் அதிர்ச்சி நிறைந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், கடந்த 4 மாதங்களில் அதாவது ஏப்ரல் - ஜூலை வரையில் இந்தியாவில் மாதச் சம்பளத்துக்கு பணிபுரியும் ஒரு கோடியே 89 லட்சம் பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரலில் ஒரு கோடியே 77 லட்சத்தினரும், மே மாதத்தில் ஒரு லட்சம் பேரும், ஜூலை 39 லட்சம் பேரும், ஜூலையில் 50 லட்சம் பேரும் வேலையிழந்திருக்கிறார்கள்.
இதுமட்டுமல்லாது தினக் கூலித் தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் என 9 கோடி பேரின் வேலையும் இந்த ஊரடங்கு நேரத்தில் பறிபோயுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ட்விட்டரில் மோடி அரசை சாடி ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். அதில், கடந்த 4 மாதங்களில் 2 கோடி பேரின் வேலை வாய்ப்புகளும் 2 கோடி குடும்பங்களின் எதிர்காலம் இருளில் மூழ்கியுள்ளது.
ஃபேஸ்புக்கில் தவறான செய்திகள் மூலம் வெறுப்பை பரப்பி உண்மையை மறைத்திட முடியாது என பாஜக அரசை விமர்சித்துள்ளார்.
Also Read
-
“திராவிட மாடல் ஆட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
யாருக்காக செயல்படுகிறார் மோடி? : வரியை மீறி ரசியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் இந்தியா!
-
“பிற்போக்குத்தனமான ஒரு இயக்கம் உள்ளது என்றால் அது RSS தான்” - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
-
“இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர்” - துணை முதல்வர் புகழாரம்!
-
9 நாட்கள் சூரிய சக்தி தொழில் முனைவோர் குறித்த பயிற்சி.. எங்கு? எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!