India
நாட்டில் 50,000-ஐ கடந்தது கொரோனா பலிகள்.. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிசையில் தொடரும் மோடி அரசின் சாதனைகள்!
நாடு முழுவதும் கொரோனாவுக்கு இதுவரையில் 26 லட்சத்து 47 ஆயிரத்து 663 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 57 ஆயிரத்து 981 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரையில் 19 லட்சத்து 19 ஆயிரத்து 842 பேர் கொரோனாவில் இருந்து மீண்டிருப்பதாகவும், நேற்று மட்டும் 57 ஆயிரத்து 584 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனாவால் இந்தியாவில் 1.92 சதவிகிதம் பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும் எண்ணிக்கை அளவில் நாட்டில் 50 ஆயிரத்தை கடந்துள்ளது கொரோனா பலி. அதன்படி நேற்று ஒரே நாளில் 941 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 50 ஆயிரத்து 921 ஆக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து தற்போது 6 லட்சத்து 76 ஆயிரத்து 900 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இதுவரையில் 3 கோடியே 41 ஆயிரத்து 400 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் நேற்று ஒரு நாளில் 7.31 லட்சத்து 697 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Also Read
-
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் முதல் திருநங்கைகளுக்கான ரேஷன் அட்டை வரை.. DMK MP-க்கள் அடுக்கடுக்கான கேள்வி
-
தொழில் முனைவுதிட்டம் முதல் மானியத்துடன் கூடிய கடன் வரை.. SC/ST முன்னேற்றத்தின் பட்டியல்.. அரசு பாராட்டு!
-
“கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பெரம்பூரில் ரூ.39 கோடியில் 310 திறந்தவெளி மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
கொளத்தூர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்! - 6 நியாய விலைக்கடைகள், மறுவாழ்வு மையம் தொடக்கம்!