India
முன்னாள் அமைச்சர் கொரோனாவுக்கு பலி - புதுச்சேரியில் தீவிரமடையும் தொற்று!
புதுச்சேரி மாநிலத்தில் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஏழுமலை கொரோனா தொற்று காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகின்றது. இன்று அதிகபட்சமாக இதுவரை இல்லாத அளவிற்கு 481 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
புதுச்சேரியின் ஊசுடு தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டவர் ஏழுமலை (54). கடந்த காங்கிரஸ் ஆட்சியில் உள்ளாட்சித் அமைச்சராக அவர் பதவி வகித்தார். இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதனால் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஏழுமலை, சிகிச்சை பலனின்றி இன்று மதியம் உயிரிழந்தார். மாரடைப்பால் உரிழந்ததற்காக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கபட்டு முன்னாள் எம்.எல்.ஏ பாலன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
நிபந்தயற்ற ஆதரவு! : “உண்மையில் தியாகம்தான்.. வரலாறு பாராட்டும்...” - கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் பாராட்டு!
-
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துலாம் தேவை இல்ல... - நெத்திப்போட்டில் அடித்த ஒன்றிய பாஜக அரசு! - விவரம்!
-
மகளிர் இட ஒதுக்கீடு : “வரவேற்றாலும், எங்கள் உரிமையை விட்டுத்தரமாட்டோம்!” - அதிரடி காட்டிய முதலமைச்சர்!
-
இனிதே நிறைவுற்ற பேச்சுவார்த்தை... திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? - விவரம்!
-
வேறு பெண்ணுடன் உறவு... தட்டிக்கேட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... அதிமுக பிரமுகர் மீது புகார்!