India
“ஓராண்டு பணியாற்றினாலும் பணிக்கொடை வழங்க வேண்டும்” : மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழுப் பரிந்துரை!
தொடர்ந்து பல ஆண்டுகள் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெறும் பணியாளருக்கு வழங்கப்படும் பணி ஓய்வுத்தொகையே கிராஜுட்டி எனப்படும் பணிக்கொடை.
தொழிலாளர்களின் பணிக்கொடை பலனைப் பெறுவதற்கு ஐந்து ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என்ற நடை முறை தற்போது உள்ளது.
இதனை மாற்றி ஒராண்டு பணியாற்றினாலும் பணிக்கொடை வழங்கப்பட வேண்டும் என்று தொழில் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை வழங்கியுள்ளது. அதற்கான அறிக்கை நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், தனியார் துறைகளில் தற்போது இரண்டு, ஆண்டுகள் மூன்று ஆண்டுகள் மட்டும் பணியாற்றிய பிறகு பல்வேறு காரணங்களால் வேறு நிறுவனங்களில் சேரும் போக்கு அதிகரித்துள்ளது.
எனவே, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்பட அனைவருக்கும் ஓராண்டு பனியாற்றினாலும் பணிக்கொடை வழங்கப்பட வேண்டும். அதற்கு தேவையான சட்டதிருத்தம் கொண்டுவர வேண்டும் என்று பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
Also Read
-
பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!