India
“இன்னும் 7 ஆண்டுகளில் மக்கள்தொகையில் இந்தியா சீனாவை முந்தும்” - ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
இந்தியாவில் ஆண்டுதோறும் மக்கள் தொகை வெகுவாக அதிகரித்துவரும் நிலையில், 2027-ஆம் ஆண்டுவாக்கில், சீனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடிக்கும் என ஐ.நா சபை கணித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை, 1989ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ம் தேதியை உலக மக்கள் தொகை தினத்தை அனுசரித்து வருகிறது. உலக மக்கள்தொகை 5 பில்லியனை எட்டிய நாளான 1987 ஜூலை 11ம் தேதியை நினைவுகூரும் வகையில் இந்த தேதி தேர்வு செய்யப்பட்டது.
தற்போது உலக மக்கள் தொகை 770 கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், மக்கள் தொகை பெருக்கும் குறித்து ஐ.நா.சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக மக்கள்தொகை 2050ம் ஆண்டு 970 கோடியையும், 2100ல் 1,100 கோடியையும் எட்டும் எனக் கணித்துள்ளது.
உலக மக்கட்தொகையில் சீனா 19 சதவீதத்தைக் கொண்டுள்ளது. உலக நிலப்பரப்பில் வெறும் 2 சதவீதம் மட்டுமே கொண்டுள்ள இந்தியா மக்கள் தொகையில் 18 சதவீதத்தை கொண்டுள்ளது. இந்தியாவின் தற்போதைய மக்கட்தொகை 139 கோடி ஆகும்.
இதே வேகத்தில் மக்கட்தொகை அதிகரித்தால், 2027-ம் ஆண்டில் இந்தியா சீனாவை பின்னுக்குத் தள்ளி மக்கட்தொகையில் முதலிடம் பிடிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2100ம் ஆண்டுவாக்கில் இந்தியாவின் மக்கட்தொகை 1.5 பில்லியனாகவும், சீனாவின் மக்கட்தொகை 1 பில்லியனாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“சென்னையின் 100 ஆண்டுகள் பழமையான மரங்கள்..” புத்தகமும், விருதுகளும்.. முதலமைச்சர் அசத்தல்!
-
தீவிரமாகும் சர்வதேச போர்... பாதிக்கப்படும் தமிழ்நாடு.. பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
சிலிண்டர்களை பதுக்கினால் சிறை… எஸ்மா (ESMA) சட்டம் சொல்வது என்ன? - முழு தகவல் உள்ளே!
-
கச்சா எண்ணெய் விவகாரம் : “டெல்லிக்கு தலைநகர் அமெரிக்காவா?” - முரசொலி தலையங்கம் ஆதங்கம்!
-
தமிழ்நாட்டில் நாங்கள்தான் ஜெயிப்போம்! நாங்கள் மட்டும்தான் ஜெயிப்போம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!