India
திரிபுராவில் ரத்த தான முகாமை சிதைத்த பா.ஜ.க-வினர்.. SFI, DYFI அமைப்பினர் 7 பேர் படுகாயம்!
இந்தியாவில் முதல் தேசிய ஊரடங்கு அறிவிக்கும் போது சுமார் 600 கொரோனா பாதிப்புகளை கொண்டிருந்தது. ஆனால், நான்காம் கட்ட ஊரடங்கை கடந்து ஐந்தாம் கட்டத்தில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு ஒரு லட்சத்து 83 ஆயிரத்தை கடந்துள்ளது.
இப்படியான இக்கட்டான சூழலிலும் இந்துத்வா கும்பலின் தாக்குதல்களை திறைமறைவாக நிகழ்ந்துக் கொண்டே வருகின்றன.
இந்த நிலையில், திரிபுரா மாநிலத்தில் இதுவரை 282 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு நோயாளிகளின் தேவைகளுக்காக இந்திய மாணவர் சங்கம் (SFI) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் கிழக்கு அகர்தலாவில் உள்ள ராம் நகரில் ரத்த தான முகாம் நடத்தப்பட்டது.
இதனை திரிபுரா மாநில முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்கார் தொடங்கி வைத்தார். கோவிட் 19 தாக்குதல் காரணமாக ரத்த வங்கிகளில் ரத்த பற்றாக்குறை ஏற்பட்டதால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அமைப்பினர் கூட்டாக இந்த ரத்த தான முகாமை நடத்தினர்.
சுமார் 38 பேர் ரத்த தானம் செய்து வந்த நிலையில், திடீரென பா.ஜ.க-வினர் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர் என இளைஞர் அமைப்பின் முன்னாள் தலைவர் அமல் சக்கரவர்த்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பா.ஜ.கவினர் தாக்குதலில் ஈடுபட்டதில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக DYFI செயலாளர் நபரூன் டெப் கூறியுள்ளார். படுகாயமடைந்த அனைவரும் ஐ.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ரத்த தான முகாமில் வேண்டுமென்றே தாக்குதலில் ஈடுபட்ட பா.ஜ.கவைச் சேர்ந்த 25 பேர் மீதும் மேற்கு அகர்தலா காவல்நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் நபரூன் கூறியுள்ளார்.
Also Read
-
5 மாநில தேர்தல் : ஆட்சியை பிடிக்கப்போவது யார்? : வெளியான Exit Polls முடிவுகள்!
-
தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க கூட்டணியே ஆட்சி அமைக்கும்: உறுதி செய்த Exit Polls முடிவுகள்!
-
இஸ்லாமியச் சிறுமிக்கு இந்து பெற்றோர் : உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!
-
பா.ஜ.க ஆளும் மாநிலத்தின் அவலம் - உயிருக்குப் போராடிய கணவர்: மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!
-
”தேர்தல் ஆணையமா ஆளுநர் ஆர்.என்.ரவி.. அமைதியாக நடக்கிறதா மேற்கு வங்க தேர்தல்?” : முரசொலி கேள்வி!