India
“இந்தாண்டு 100 நாட்கள் மட்டுமே பள்ளிகளில் வேலை நாட்கள்” - மத்திய அரசு திட்டம்!
வரும் கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலை நாட்களை 100 நாட்களாகக் குறைக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
கொரோனா பாதிப்பு காரணமாக ஜூன் மாதம் தொடங்க வேண்டிய கல்வி ஆண்டு மூன்று மாதங்கள் தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆக்ஸ்ட் மாதத்திலும், மற்ற மாணவர்களுக்கு செப்டம்பரில் மட்டுமே பள்ளிகளைத் திறக்க இயலும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
எனவே, வரும் கல்வி ஆண்டுக்கான பணி நாட்களை வழக்கமான 220 நாட்களிலிருந்து 100 நாட்களாகக் குறைக்க மனிதவள மேம்பாட்டுத் துறை ஆலோசனைகளை நடத்துவருகிறது.
அதன்படி, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் வகுப்புகள் நடத்தலாம் எனத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
6 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு அதிகபட்சமாக 4 நாட்களும், 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக 5 நாட்கள் வரை வகுப்புகளை நடத்தலாம் என்றும் புதிய வரைமுறைகளை வகுத்துள்ளதாகத் தெரிகிறது.
மற்ற நாட்களில் மாணவர்கள் வீட்டிலிருந்தே படிக்க ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். அதுபோல் 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு பாடத்திட்டத்தையும் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.
மேலும், போதிய இடைவெளியுடன் வகுப்புகளை நடத்துவற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தேசிய அளவில் வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டின் நிதிப் பொறுப்பும் பட்ஜெட் மேலாண்மையும் கட்டமைப்பிற்குள் உள்ளது” : இந்து நாளேடு பாராட்டு!
-
தஞ்சையில் அடுத்த மகளிர் அணி மாநாடு! - தயாராகும் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” : முழு விவரம் உள்ளே!
-
“மதவாத அரசியல் போதையை தடுத்திட நாமெல்லாம் ஒன்று சேர வேண்டும்!” : திருச்சியில் முதலமைச்சர் பேச்சு!
-
தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டு 21 லட்சம் வாகனங்கள் பதிவு : கடந்த ஆண்டை விட 8.4% வாகனங்கள் விற்பனை!
-
2025 ஆம் ஆண்டில் 2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!