India
“எங்க அப்பா, அம்மா, மிஸ்சை கைது பண்ணுங்க” : டியூசன் அனுப்பியதால் போலிஸாரிடம் புகார் அளித்த சிறுவன்!
கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊர்டங்கால் பல முக்கிய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் படாலா பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுவன் ஒருவனை ஊரடங்கு நேரத்தில் அவரது பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி டியூசன் அனுப்பி வைத்துள்ளனர். அதனால் அதிருப்தி அடைந்த சிறுவன் டியூசன் செல்லாமல் படாலா காவல் நிலையத்திற்கு சென்றுள்ளான்.
அழுகையும் ஆத்திரமுமாய் வந்த சிறுவனை அழைத்து போலிஸார் ஏன் இங்கே வந்தீர்கள் என கேட்டுள்ளனர். அப்போது தனது அழுகையை நிறுத்தி பேச தொடங்கிய சிறுவன், அனைவரும் வீ்ட்டில் இருக்கும்போது தன்னை மட்டும் பெற்றோர் வற்புறுத்தி டியூசன் அனுப்பிவைப்பதாக போலீஸ் அதிகாரிகளிடம் புகார் கூறியுள்ளான்.
அதுமட்டுமின்றி, தன்னை டியூசன் அனுப்பி வைத்த அம்மா, அப்பா மற்றும் டியூசன் டீச்சர் ஆகியோரை கைது செய்யவேண்டும் என கூறியுள்ளான். இதனையடுத்து சிறுவனை அழைத்துக்கொண்டு டியூசன் எடுக்கும் ஆசிரியை வீட்டிற்கு சென்ற டி.எஸ்.பி குர்திப் சிங், அவரிடம் டியூசன் எடுக்கிறீர்களா? எனக் கேட்டார்.
அப்போது ஆசிரியர் இல்லை என மறுக்க சிறுவன் உடனே இல்லை இல்லை தனக்கு மட்டும் டியூசன் எடுப்பதாக கூறியுள்ளான். பின்னர் அவரும் உண்மையை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து இனி டியூசன் எடுக்கக்கூடாது என ஆசிரியருக்கு எச்சரிக்கை விடுத்துவிட்டு அங்கிருந்து சிறுவனின் வீட்டிற்குச் சென்று பெற்றோரிடம் அறிவுரை கூறி சிறுவனை ஒப்படைத்தார். இந்த சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
Also Read
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!