India
உ.பிக்கு 8,255.19 கோடி.. தென் மாநிலங்களுக்கு 7,376.03 கோடி.. யானை பசிக்கு சோளப் பொறியா மத்திய நிதி?
கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மத்திய அரசு தேசிய ஊரடங்கை அறிவித்துள்ளது. மாநில அரசுகளும் பல்வேறு வகையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.
இதற்கிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள நிதி ஒதுக்க வேண்டும் என மாநில அரசுகள் மத்திய அரசுக்கு வலியுறுத்தின. அதில், தமிழக அரசு 9,000 கோடி ரூபாய் தேவை என கேட்டிருந்தது. ஆனால் மத்திய அரசோ சுமார் 500 கோடி ரூபாயே ஒதுக்கியிருந்தது. அப்போது கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படாத உத்திரபிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் ஆயிரக்கணக்கில் நிதியை வாரி இரைத்தது மத்திய மோடி அரசு.
அதேபோன்ற நிகழ்வு தற்போதும் நடைபெற்றுள்ளது. 15வது நிதிக்குழுவின் பரிந்துரையின் பேரில், மாநிலங்களுக்கான ஏப்ரல் மாத பங்கீடு என ரூ.46 ஆயிரத்து 38 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதில், தமிழகத்துக்கு மட்டும் 1,928.56 கோடி நிதியை ஒதுக்கிய மத்திய அரசு, உத்தர பிரதேச மாநிலத்துக்கு 8,255.19 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
ஆனால், ஆந்திராவுக்கு 1892.64, கர்நாடகாவுக்கு 1678.57, கேரளாவுக்கு 894.53, தமிழகத்துக்கு 1928.56, தெலங்கானாவுக்கு 982,(கோடிகளில்) என ஒட்டுமொத்தமாக நிதியில் இருந்து 16.02 சதவிகிதம் மட்டுமே கிடைக்கப்பெற்றிருக்கின்றன. இது தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களை ஒப்பிட்டாலும் ஒட்டுமொத்த நிதியில் இருந்து உத்தர பிரதேசத்துக்கு 17.93 சதவிகிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணும் சுண்ணாம்பும் என்ற சொற்றொடர் போன்று மத்திய மோடி அரசு பாரபட்சத்தின் உச்சத்தில் இருந்து செயல்பட்டு நிதிகளை பகிர்ந்து வருகிறது. பாசிசத்தை கடைபிடிக்கும் அரசிடம் மாநில அரசுகள் ஒவ்வொன்றுக்கும் போராடி பெறும் நிலையே ஏற்பட்டுள்ளது.
Also Read
-
“ஏ.. எடு.. எடு..” -சேலம் பேருந்து நிலையத்தில் பெண்களிடம் மாமூல்.. அட்ராசிட்டியில் ஈடுபடும் தவெக நிர்வாகி!
-
திருவள்ளூர் அம்மோனியா வாயுக் கசிவு : 2 பேர் பலி... 50-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை - விவரம்!
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!