India
கொரோனா எதிரொலி: ‘மைக்’ மூலம் வைரஸ் பரவும் - பேட்டி எடுக்கக் கூடாது- நிருபர்களுக்கு கேரள அரசு கட்டுப்பாடு!
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் உலக நாடுகளை நிலைகுலையச் செய்துள்ளது. இந்த வைரஸ் கிருமி இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் தற்போது வரை 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கேரளாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால், அம்மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பல்வேறு கெடுபிடிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் எவ்வித நோய் தாக்கத்துக்கும் ஆட்படாமல் இருக்க இந்த அதிரடி உத்தரவுகள் உதவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் எந்த வகையிலும் பரவலாம் என்ற நிலை உள்ளதால், கேரளாவில் கொரொனா வைரஸ் பாதித்தவர்களையோ, அதன் அறிகுறி உள்ளவர்களையோ அல்லது அவர்களது உறவினர்களையோ செய்தியாளர்கள் பேட்டி எடுக்கக் கூடாது என பினராயி விஜயன் அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
ஏனெனில், அவ்வாறு பேட்டி எடுக்கும் போது மைக் மூலம் நோய் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்பதாலேயே இந்த எச்சரிக்கை விடப்படுள்ளது. முன்னதாக கர்நாடகாவில் இதேபோல பேட்டி எடுத்தவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!
-
ரேபிஸ் மரணங்களுக்கு தீர்வு என்ன? : மக்களவையில் ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய ஆ.ராசா MP!
-
“கர்நாடக அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது” : அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்!