India
“உள்துறை அமைச்சக இணையதளத்தில் அசாம் NRC விவரங்கள் மாயம்” : தொலைத்துவிட்டதா டிஜிட்டல் இந்தியா அரசு?
வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறுவதைத் தடுப்பதாகக் கூறி மத்திய பா.ஜ.க அரசு தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைக்கு கொண்டுவந்தது. அதன்படி, அசாம் மாநிலத்தில் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டது.
பல்வேறு குழப்பங்களோடும் குளறுபடிகளோடும் தொடங்கப்பட்ட குடிமக்கள் கணக்கெடுப்பு பணி முழுவதுமாக நிறைவடைந்து மக்கள் அறிந்துகொள்வதற்காக அசாம் குடிமக்கள் பதிவேடு குறித்த விவரங்கள் அனைத்தும் உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படிருந்தது.
இந்நிலையில், உள்துறை அமைச்சகத்தின் சர்வரில் இருந்த அசாம் குடிமக்கள் பதிவேடு குறித்த விவரங்கள் அனைத்தும் மாயமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திடீரென மாயமான இந்தத் தகவலால் அப்பகுதி மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.
ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்தத் தகவலையும் இந்த பா.ஜ.க அரசு தொலைத்துவிட்டதாகவும், மத்திய அரசின் டிஜிட்டல் தகவல் பரிமாற்றத்தின் தோல்வியையே இந்த நிகழ்வு வெளிப்படுத்தியுள்ளதாகவும் அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விவரங்களைப் பார்க்க முடியவில்லை. விரைவில் கணினி சர்வர் கோளாறு சரி செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!