India
மனைவியிடம் ஆபாச பேச்சு; அரிவாளுடன் சென்று நிதி நிறுவனத்தை கதிகலங்கச் செய்த கணவர்: EMI-யால் நடந்த விபரீதம்
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பஜாஜ் நிதி நிறுவனம் சார்பில் அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் மாதாந்திர தவணை மூலம் செல்போன் ஒன்று வாங்கியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக செல்போன் தொகைக்கான மாதாந்திர தவணை சரியாக செலுத்தவில்லை என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து பஜாஜ் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு தொகையை செலுத்துமாறு கூறியுள்ளனர்.
குடும்ப சூழல் பணம் செலுத்துவது தொடர்பாக தாமதமாகும் என பெண் கூறவே அதனை மறுத்த ஊழியர்கள் அந்த பெண்ணை, திட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் தன்னை பஜாஜ் நிதி நிறுவன ஊழியர்கள் ஆபாச வார்த்தைகளில் திட்டுவதாக கணவரிடம் முறையிட்டுள்ளார்.
இதனைக்கேட்டு ஆத்திரமடைந்த கணவர் பஜாஜ் நிதி நிறுவனத்திற்குச் சென்று அரிவாளுடன் சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து ரகளையில் ஈடுபட்டவரை அலுவலத்திற்குள் உள்ளே வைத்து பூட்டிய நிறுவன ஊழியர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அரிவாளுடன் ஆக்ரோஷமாக வந்து மிரட்டியதில், நிருவன ஊழியர்கள் கதிகலங்கி நின்றனர்.
Also Read
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.3 ஆயிரத்துடன் கூடிய தமிழர் திருநாள் ‘பொங்கல்’ பரிசுத் தொகுப்பு! : திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்!