India
“தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை நிறைவேற்ற வந்த கட்சி அ.தி.மு.க இல்லை” - முரசொலி தலையங்கம்!
தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு வரும் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வு தமிழில் நடத்தப்படவேண்டும் எனும் கோரிக்கை மிகப் பலமாக எழுந்துள்ளது. இதே கோரிக்கையை தி.மு.க அக்டோபர் மாதமே வழியுறுத்தியுள்ளது.
ஆனால் தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் அ.தி.மு.க என்ன சொல்கிறது? தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் மெத்தப் படித்தவர் என்பார்கள். ஆனால் அவர் தப்புத்தப்பாய் பேசுவார். அப்படித்தான் இப்போது குடமுழுக்கு தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் என்று சொல்லியிருக்கிறார்.
அறிஞர் அண்ணா பெயரைக் கொண்டிருக்கும் அ.தி.மு.க அதன் அமைச்சர்கள் தமிழில் குடமுழுக்குச் செயவற்குப் பரிசீலிக்கப்படும் என்கிறார்கள். அறிஞர் அண்ணா இந்த தமிழ் வழிபாட்டு முறையைப் பற்றி கருத்துச் சொல்லி இருக்கிறார். அது திராவிட நாடு இதழில் 22.05.1955ல் வெளிவந்துள்ளது. அதில், இக்காலகட்டத்தில் குறைந்தபட்ச தமிழில் வழிபாட்டு முறையை வரவேற்ற குன்றக்குடி தெய்வசிகாமணி அடிகளாரை வரவேற்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
தந்தை பெரியாரும் இந்த வழிபாட்டு முறையைக் ‘கொள்கையில் பங்கு’ என்று சொல்வார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவின் கடுத்துகள் மீது இந்த ஆட்சியாளர்களுக்கு எவ்வளவு அக்கறை இருக்கும் என்பது நாம் அறிந்த ஒன்றே. அ.தி.மு.க தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை நிறைவேற்ற வந்த கட்சி இல்லை. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா கொள்கை எதுவென்றும் நாம் சொல்லத் தேவையில்லை. ஆகவே ஆவர்கள் வழிவந்த அ.தி.மு.க-காரர்கள், தமிழ் வழிபாட்டிற்குரிய மொழியா என்பதில் ஐயப்பாடு உடையவர்கள்!
Also Read
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!