India
“இந்தியாவில் தொழில் நடத்தவே சிரமமாக இருக்கிறது” - டாடா சன்ஸ் நிறுவன தலைவர் பேச்சு!
இந்தியாவில் நிறுவனங்கள் தொழில் தொடங்கி நடத்துவதற்கு பெரும் சிரமமாக உள்ளதாக டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், இந்தியாவில் தொழில்கள் முன்னேற்றம் அடைய பல வகையில் ஒத்துழைப்பு தேவைப்படுவதாகக் கூறினார். அரசு தரப்பில் இருந்து முழு அளவில் ஆதரவு இருக்கவேண்டும். இல்லையென்றால் தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
பொருளாதாரம் மற்றும் தொழில் முறையில் மாற்றம் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்திய அவர், பல தடைகளைத் தாண்டி தொழில் நடத்துவது பெரும் சவாலாக உள்ளதாக கூறினார்.
இந்தியாவில் ஊழியர்கள் கடுமையாக உழைக்கும் திறன் படைத்தவர்கள் என்றும் அவர்களின் உழைப்பை சரியான திசையில் கொண்டு செல்வதற்கு அரசு முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்றும் டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் தெரிவித்தார்.
இந்தியாவின் பொருளாதாரம் மந்தநிலையைச் சந்தித்து வரும் நிலையில் மோடி அரசு உரிய ஆலோசனையை பெற்று இந்த மந்தநிலையை சீரமைக்காமல் உள்ளது. இதனால் டாடா சன்ஸ் சந்திரசேகரன் போன்ற பல தொழிலதிபர்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவது குறித்து அஞ்சுகின்றனர். இனிமேலாவது விழித்துக்கொண்டு மத்திய அரசு சீரான திட்டங்களை வகுக்குமா எனும் எதிர்ப்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டை வஞ்சிக்கிற போக்கு தொடருமேயானால்... : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
-
“அமைதியும் எளிமையுமிக்கவர்... திரைப்பாசம் குடும்ப பாசமானது..” - AVM சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!
-
சென்னை மாநகர செரீப்.. எழுத்தாளர்... தயாரிப்பாளர்... பன்முக கலைஞர் AVM சரவணன் காலமானார்!
-
SIR பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள இதுவே நோக்கம்... புட்டுப்புட்டு வைத்த முரசொலி தலையங்கம்!