India
“இந்தியாவில் தொழில் நடத்தவே சிரமமாக இருக்கிறது” - டாடா சன்ஸ் நிறுவன தலைவர் பேச்சு!
இந்தியாவில் நிறுவனங்கள் தொழில் தொடங்கி நடத்துவதற்கு பெரும் சிரமமாக உள்ளதாக டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், இந்தியாவில் தொழில்கள் முன்னேற்றம் அடைய பல வகையில் ஒத்துழைப்பு தேவைப்படுவதாகக் கூறினார். அரசு தரப்பில் இருந்து முழு அளவில் ஆதரவு இருக்கவேண்டும். இல்லையென்றால் தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
பொருளாதாரம் மற்றும் தொழில் முறையில் மாற்றம் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்திய அவர், பல தடைகளைத் தாண்டி தொழில் நடத்துவது பெரும் சவாலாக உள்ளதாக கூறினார்.
இந்தியாவில் ஊழியர்கள் கடுமையாக உழைக்கும் திறன் படைத்தவர்கள் என்றும் அவர்களின் உழைப்பை சரியான திசையில் கொண்டு செல்வதற்கு அரசு முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்றும் டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் தெரிவித்தார்.
இந்தியாவின் பொருளாதாரம் மந்தநிலையைச் சந்தித்து வரும் நிலையில் மோடி அரசு உரிய ஆலோசனையை பெற்று இந்த மந்தநிலையை சீரமைக்காமல் உள்ளது. இதனால் டாடா சன்ஸ் சந்திரசேகரன் போன்ற பல தொழிலதிபர்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவது குறித்து அஞ்சுகின்றனர். இனிமேலாவது விழித்துக்கொண்டு மத்திய அரசு சீரான திட்டங்களை வகுக்குமா எனும் எதிர்ப்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
Also Read
-
கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!
-
திராவிட மாடலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை! - முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் பாஜக வஞ்சிக்கிறது!” : முதலமைச்சர் உரை!
-
விழுப்புரம் மக்களுக்காக... ரூ.688.48 கோடியில் நலத்திட்ட உதவிகள்... அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!