India
வேலையின்மையால் தற்கொலை செய்து கொள்வதில் தமிழகம் 2ம் இடம் - தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அதிர்ச்சி தகவல்!
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2018ம் ஆண்டில் நாள்தோறும் சராசரியாக 35 பேரும், சுயதொழில் செய்வோர் 36 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மகாராஷ்ட்ராவில் 17 ஆயிரத்து 972 பேரும், தமிழகத்தில் 13 ஆயிரத்து 896 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேற்குவங்கம், மத்திய பிரதேசம், கர்நாடக மாநிலங்கள் முறையே 3,4 மற்றும் 5ஆம் இடத்தில் உள்ளன.
2018ம் ஆண்டு தற்கொலை செய்தவர்களில் விவசாயத் துறையை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 349 ஆக உள்ளது. உற்பத்திக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதேபோன்று, வேலை கிடைக்காமல் 12 ஆயிரத்து 936 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த 2018ம் ஆண்டில் ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் தற்கொலை செய்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற காரணங்களால் 2018ம் ஆண்டு தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதும் இந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
Also Read
-
MLA தொடங்கி அரசு ஆலோசகர் வரை.. ஜோதிடத்துக்கு முக்கியத்துவம்.. மூட நம்பிக்கைக்கு செவிசாய்க்கும் விஜய்!
-
நீட் தேர்வு ரத்து - “நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
-
”நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக-விற்கு சிக்கல்... தவெக எம்.எல்.ஏ-வுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி தடை!”
-
“பேரவையின் மாண்புகளையும் காத்திட வேண்டும்” : பேரவை தலைவர், துணைத் தலைவருக்கு தி.மு.க தலைவைர் வாழ்த்து!
-
“திமுக என்றுமே ஒரு ஆக்க சக்தியாகவே திகழும்”: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!