India
வேலையின்மையால் தற்கொலை செய்து கொள்வதில் தமிழகம் 2ம் இடம் - தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அதிர்ச்சி தகவல்!
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2018ம் ஆண்டில் நாள்தோறும் சராசரியாக 35 பேரும், சுயதொழில் செய்வோர் 36 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மகாராஷ்ட்ராவில் 17 ஆயிரத்து 972 பேரும், தமிழகத்தில் 13 ஆயிரத்து 896 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேற்குவங்கம், மத்திய பிரதேசம், கர்நாடக மாநிலங்கள் முறையே 3,4 மற்றும் 5ஆம் இடத்தில் உள்ளன.
2018ம் ஆண்டு தற்கொலை செய்தவர்களில் விவசாயத் துறையை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 349 ஆக உள்ளது. உற்பத்திக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதேபோன்று, வேலை கிடைக்காமல் 12 ஆயிரத்து 936 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த 2018ம் ஆண்டில் ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் தற்கொலை செய்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற காரணங்களால் 2018ம் ஆண்டு தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதும் இந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
Also Read
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !