India
அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாமா? - சீராய்வு மனு மீது இன்று முதல் சுப்ரீம் கோர்ட் விசாரணை!
சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயதுபெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று முதல் விசாரணைக்கு வருகிறது. தலைமை நீதிபதி தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது.
கேரளாவின் சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல பெண்கள் கோவிலுக்குச் செல்ல முயற்சித்தனர். ஆனால், பா.ஜ.கவினரும் இந்து அமைப்பினரும் வன்முறையில் ஈடுபட, கேரளா முழுவதும் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில் சபரிமலை தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 56 சீராய்வு மனுக்கள் உட்பட 65 மனுக்கள் மீது 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து அதனை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என அண்மையில் அறிவித்தது. இதுமட்டுமல்லாமல், மசூதிகளுக்கு பெண்களும் செல்லக் கோரியது, பார்சி மதப் பெண்கள் தொடர்பான வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் சபரிமலை மேல்முறையீட்டு வழக்கை இன்று விசாரணைக்கு வருகிறது. மேலும், சபரிமலை வழக்கு தொடர்பாக நீதிபதிகள் இடையே ஒருமித்த கருத்து நிலவ வேண்டும் என்பதற்காக முந்தைய அமர்வில் இருந்த நீதிபதிகள் எவரும் தற்போது 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இடம்பெறவில்லை.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!