India
ஜே.என்.யூ மாணவர்கள் மீதான கொலைவெறித் தாக்குதல் எதிரொலி - பல்கலைக்கழகத் தேர்தலில் ஏ.பி.வி.பி படுதோல்வி!
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதிக் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கடந்த ஜன.,5ம் தேதி ஏ.பி.வி.பி கும்பல் மாணவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, ஏ.பி.வி.பி அமைப்புக்கு கண்டனம் தெரிவித்தும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலும், மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், மாணவர்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
தற்போது, வாரணாசியில் உள்ள சம்பூர்ணனந்தா சமஸ்கிருத விஷ்வவைத்யாலயா என்ற பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்தலில் இந்திய தேசிய மாணவர் சங்கம் ஏ.பி.வி.பி அணியை தோற்கடித்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கான யூனியன் தலைவர், துணைத் தலைவர், பொதுச்செயலாளர் என அனைத்து விதமான பொறுப்புகளுக்கும் நடைபெற்ற இந்தத் தேர்தலில் ஏ.பி.வி.பி, அணி கடும் தோல்வியைத் தழுவியுள்ளது.
ஜே.என்.யூ மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலின் எதிரொலியாக இந்த தேர்தலில் ஏ.பி.வி.பி அணி தோல்வியுற்றது என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மாணவர்கள் மீது வன்முறையை நிகழ்த்தும் இது போன்ற இந்துத்வா கும்பலுக்கு ஏ.பி.வி.பி-யினரின் தோல்வி ஒரு சிறந்த பதிலடியாக இருக்கும் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!