India
“பீகார் முதல்வரை காணவில்லை” - குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காததால் நூதன போராட்டம்!
பா.ஜ.க கொண்டுவந்த குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும், எதிர்க்கட்சிகள், மாணவர்கள், முதலமைச்சர்கள் என பலர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளா, மத்திய பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநில அரசுகள் குடியுரிமை சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பீகாரில் பா.ஜ.க கூட்டணியில் இணைந்து ஆட்சி அமைத்துள்ள ஐக்கிய ஜனதா தளம் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளது.
ஆனால ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த அம்மாநில முதலமைச்சராக உள்ள நிதிஷ்குமார் இதற்கு ஆதரவா, எதிர்ப்பா என தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்காததால் கோபமடைந்த அம்மாநில மக்கள் இரவோடு இரவோடு பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை காணவில்லை என பாட்னா முழுக்க போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
முதலமைச்சரை காணவில்லை என விளம்பர பேனர் ஒட்டியிருப்பது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரூ.74.70 கோடியில் சென்னை மாநகராட்சியின் புதிய மன்றக்கூடம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
சென்னையின் கலாச்சாரச் சின்னம் : புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“எந்த பாசிச சக்திகளாலும் ஒன்றும் செய்ய முடியாது” : கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“எங்களுக்கு யாரைக் கண்டும் எந்த பயமும் கிடையாது” : கனிமொழி எம்.பி அதிரடி!
-
“திராவிட மாடலின் சாதனைகள் தொடரும்; உழவர் வாழ்வு செழிக்கும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!