India
குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழக்கு!
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமியர்கள் அல்லாத மக்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை பா.ஜ.க அரசு நிறைவேற்றியுள்ளது.
இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்க்கட்சிகளிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும், இந்த மசோதாவால் வடகிழக்கு மாநில மக்கள் வெகுவாக பாதிக்கப்பட நேரிடும் என்பதால் மத்திய அரசின் இந்த சட்டத்திருத்தத்துக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதற்கிடையில், மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களைவையிலும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை பா.ஜ.க நிறைவேற்றியுள்ளது.
ஆகையால், மத்திய அரசின் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடருவது குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில், குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி.
இதேபோல், காங்கிரஸ் தரப்பில் இருந்தும் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை நாட முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Also Read
-
மாற்றம் என்று தவெகவினர் கூறியது : மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு கீதாஜீவன் கண்டனம்!
-
விஜயின் திடீர் கரூர் பயணம் எதற்காக? : உண்மையை உரக்கச் சொன்ன முரசொலி!
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!