India
குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழக்கு!
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமியர்கள் அல்லாத மக்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை பா.ஜ.க அரசு நிறைவேற்றியுள்ளது.
இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்க்கட்சிகளிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும், இந்த மசோதாவால் வடகிழக்கு மாநில மக்கள் வெகுவாக பாதிக்கப்பட நேரிடும் என்பதால் மத்திய அரசின் இந்த சட்டத்திருத்தத்துக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதற்கிடையில், மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களைவையிலும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை பா.ஜ.க நிறைவேற்றியுள்ளது.
ஆகையால், மத்திய அரசின் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடருவது குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில், குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி.
இதேபோல், காங்கிரஸ் தரப்பில் இருந்தும் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை நாட முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Also Read
-
“பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!” : உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
ஒரு திட்டம் நாட்டிற்காக வரும்போது, அரசியல் செய்யக்கூடாது : விஜய் அறிவிப்புக்கு தங்கம் தென்னரசு எதிர்ப்பு!
-
“த.வெ.க. அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு என்பது கனவுகளைத் தகர்க்கும் பேரிடி!” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“பேசவிடு! பேசவிடு! உண்மையை பேசவிடு!” : சட்டமன்றத்தில் பேச அனுமதி மறுத்ததால் தி.மு.க வெளிநடப்பு!
-
பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்! - கனிமொழி கண்டனம்!