India
பாஸ்போர்ட்டில் இடம்பெற்ற பா.ஜ.கவின் தாமரை முத்திரை - வெளியுறவு செயலாளர் கூறிய ‘அடடே’ பதில்!
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் வழங்கப்பட்டுவரும் புதிய பாஸ்போர்ட்களில் அதிகாரி கையெழுத்திடும் இடத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரை முத்திரையாக அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது. இது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, பாஸ்போர்ட்டில் தாமரை அச்சிடப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டத்தின் போது கேரள மாநில காங்கிரஸ் எம்.பி எம்.கே.ராகவன் குற்றஞ்சாட்டிப் பேசியிருந்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத் துறை செயலாளர் ரவீஷ்குமார், “இந்தியாவின் தேசிய மலர் தாமரை. போலி பாஸ்போர்ட்களை தடுப்பதற்காக கூடுதல் பாதுகாப்பு அம்சமாகவே பாஸ்போர்ட்டில் தாமரை முத்திரை அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது.” எனக் கூறியுள்ளார்.
ஏற்கெனவே, தங்களுடைய மதவாத சித்தாந்தங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை திட்டமிட்டு செய்துவரும் பா.ஜ.க தற்போது பாஸ்போர்ட்டில் கட்சியின் சின்னத்தை புகுத்திவிட்டு தேசிய மலர் எனக் கூறுவது மக்களை கடுமையான கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டில் நாங்கள்தான் ஜெயிப்போம்! நாங்கள் மட்டும்தான் ஜெயிப்போம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
'ஸ்டாலின் தொடரட்டும் ; தமிழ்நாடு வெல்லட்டும்' - திருச்சியில் தொடங்கியது தி.மு.க-வின் 12-வது மாநில மாநாடு!
-
ரூ.21.72 கோடியில் முதல்வர் படைப்பகங்கள், பள்ளிக் கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
Vulgar Warriors.. எப்படி மக்களை காப்பாற்றுவார்? - விஜயை வெளுத்து வாங்கிய தவெக ரஞ்சனா நாச்சியார்!
-
ஈரான்- இஸ்ரேல் போர் எதிரொலி : சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்... உயரும் டீ விலையால் அதிர்ச்சி!